பச்சைப் பட்டாணி மசாலா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சைப் பட்டாணி - 1 கப்
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. தக்காளி - 3 எண்ணம்
4. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
5. கரம் மசாலா - 1 கரண்டி
6. சீரகம் - 1 கரண்டி
7. இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
8. கடுகு - 1/4 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் பச்சைப் பட்டாணியைக் குக்கரில் போட்டுத் தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
2. கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டுத் தாளித்துப் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. அதில் மிளகாய்த்தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்கித் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
4. பிறகு அதில் வேக வைத்துள்ள பட்டாணியைச் சேர்த்து அடுப்பைப் பத்து நிமிடம் குறைவான நெருப்பில் வைத்து மல்லி இலை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.