கார உருளைக்கிழங்கு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உருளைக் கிழங்கு -1/2 கிலோ
2. வெங்காயம்-2 எண்ணம்
3. இஞ்சி, பூண்டு விழுது - 1தேக்கரண்டி
4. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
5. மல்லித்தூள்- 2 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை அளவு
8. தக்காளி - 2 எண்ணம்
9. கடுகு - 1 தேக்கரண்டி
10. சோம்பு - 1 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை - சிறிது
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - தேவையான அளவு
14. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. வேக வைத்த உருளைக் கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யைக் காயவைத்துக் கடுகு, சோம்பு போட்டு, சோம்பு பொரிந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
3. இஞ்சிப் பூண்டு விழுது, கறிவேப்பிலை மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயத்தூள் போன்றவைகளைச் சேர்த்து வதக்கவும்.
4. அதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதங்கியதும், கிழங்குத் துண்டுகளை சேர்த்து உப்பைப் போட்டுக் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
5. கிழங்கில் மசாலா நன்கு கலந்து வற்றியதும் இறக்கி, மல்லித்தழையைச் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.