சௌசௌ கூட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சௌசௌள - 1 எண்ணம்
2. துவரம் பருப்பு - 1 கோப்பை
3. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
4. உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு
5. தேங்காய் (துருவியது) - 2 மேசைக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
தாளிப்பதற்கு
7. கடுகு - 1 தேக்கரண்டி
8. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
9. பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
10. கறிவேப்பிலை - சிறிது
11. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
12. எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, மசித்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
4. அதில் வெங்காயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
5. தில் சௌசௌ காய், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி விடவும்.
6. அத்துடன் வேக வைத்துள்ள பருப்பை மசித்துச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.
7. கடைசியாக, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்துக் கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.