புடலங்காய் பருப்புக் கூட்டு
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. புடலங்காய் - 300 கிராம்
2. கடலை பருப்பு - 50 கிராம்
3. பாசிப்பருப்பு - 50 கிராம்
4. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
5. தக்காளி - 1 எண்ணம்
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. தேங்காய்த் துருவல் - 1/4 கோப்பை
8. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
9. கடுகு உளுந்து - 1 தேக்கரண்டி
10. சீரகம் - 1 தேக்கரண்டி
11. அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
12. எண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு
14. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் கடலைப் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை போட்டுத் தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
2. புடலங்காய் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
3. தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
4. குக்கரில் ஊற வைத்த பருப்பு, சிறியதாக நறுக்கிய புடலங்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
5. மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், 1/4ஸ்பூன் சீரகம், அரிசி மாவு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு உளுந்து, சீரகம், கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
7. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
8. அதனுடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
9. அதனுடன் வேக வைத்த பருப்பு, காய் சேர்த்து கலந்து விடவும்.
10. அரைத்து வைத்த தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலந்து விட்டு, பச்சை வாசனை போகும் வரை மூடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.