அவரைக்காய்ப் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. அவரைக்காய் - 200 கிராம்
2. வெங்காயம் (சிறியது) - 15 எண்ணம்
3. தக்காளி - 1எண்ணம்
4. பூண்டு - 2 பற்கள்
5. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
6. மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
7. கடுகு - 1/4 தேக்கரண்டி
8. உளுந்து - 1/4 தேக்கரண்டி
9. சீரகம் - 1/4 தேக்கரண்டி
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு- தேவையான அளவு
12. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அதில்ல் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
2. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
3. அதன் பின் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் சிறிது எண்ணெயைச் சேர்த்துச் சற்றுச் சூடாக்கவும்.
5. அத்துடன் பொடியாக நறுக்கிய அவரைக்காயைச் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
6. மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
7. அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இடையிடயே கிளறிவிடவும்.
8. அவரைக்காய் நன்கு வெந்ததும், நசுக்கிய பூண்டு சேர்த்துக் கிளறவும்.
9. அவரைக்காய் சுருள வரும்வரை வதக்கி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.