சுரைக்காய் கூட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சுரைக்காய் - 1கப் (நறுக்கியது)
2. பாசிப்பருப்பு - 1/2கப்
3. சின்னவெங்காயம் - 5 எண்ணம்
4. பச்சைமிளகாய் - 1எண்ணம்
5. மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
6. சாம்பர்பொடி - 1தேக்கரண்டி
7. தக்காளி - 1 எண்ணம்
8. எண்ணெய் - 1தேக்கரண்டி
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. சீரகம் - 1/2 தேக்கரண்டி
11. பூண்டு - 4 பற்கள்
12. உப்பு -தேவையான அளவு
13. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. வெங்காயம், மிளகாய், தக்காளி போன்றவைகளை நறுக்கி வைக்கவும். பூண்டைத் தட்டி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பைப் போட்டு சிறிது வறுத்து அதன் பின்னர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
3. பாசிப்பருப்பு பாதி வெந்தவுடன், அதில் சுரைக்காய் போட்டு, மஞ்சள் பொடி, தக்காளி, உப்பு சேர்த்து வேகவிடவும்.
4. ஒரு வாணலியில் எண்ண்ய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
5. அத்துடன் தட்டிய பூண்டினைப் போட்டு வதக்கவும்.
6. வேகவைத்திருக்கும் பருப்பில் தாளிசத்தைச் சேர்த்து, அதில் சாம்பார் பொடி போட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.