காலிபிளவர் - மொச்சை மசாலா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. காலிபிளவர் - 1 எண்ணம்
2. மொச்சை - 100 கிராம்
3. வெங்காயம் - 2 எண்ணம்
4. தக்காளி - 2 எண்ணம்
5. இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
6. கடுகு - 1/4 தேக்கரண்டி
7. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
8. தேங்காய் துருவல் - 1/2 கப்
9. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
11. எண்ணெய் - தேவையான அளவு
12. கறிவேப்பிலை - சிறிது
13. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மொச்சைக் கொட்டையைப் போட்டு வேக வைத்துத் தண்ணீர் நீக்கி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அதில் காலிபிளவரை ஒவ்வொரு கிளையாக நறுக்கிப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துச் சுத்தம் செய்து, தேவையான அளவுக்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. வெங்காயம், தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு போடவும், கடுகு பொறிந்ததும், உளுத்தம் பருப்பை போட்டு அது சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
5. அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும், தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும்.
6. அதன் பின்னர், நறுக்கி சுத்தம் செய்து வைத்துள்ள காலிபிளவரையும், வேக வைத்துள்ள மொச்சைக் கொட்டையையும் போட்டு நன்கு கிளறவும்.
7. அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும்.
8. அடி பிடிக்காமல் அவ்வப்போது நன்கு கிளறி மசாலா பொருட்கள் சிவந்து வரும் போது தேங்காய் துருவலைச் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.