அவரைக்காய் மசாலா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அவரைக்காய் - 250 கிராம்
2. மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
3. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
5. வெங்காயம் - 1 எண்ணம்
6. தக்காளி - 1 எண்ணம்
7. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
8. மல்லித்தழை - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க
10. தேங்காய் துண்டு - 1 எண்ணம்
11. சீரகம் - 1 தேக்கரண்டி
தாளிக்க
12. கடுகு - 1/2 தேக்கரண்டி
13. உளுந்து - 1/2 தேக்கரண்டி
14. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. அவரைக்காயைச் சிறியதாக நறுக்கவும்.
2. வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும் .
3. அரைக்கக் கொடுத்திருக்கும் தேங்காய், சீரகத்தை அரைத்து வைக்கவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் வெங்காயம் போட்டு வதக்கவும்.
6. அதன் பிறகு அதில் தக்காளி போட்டு வதக்கவும்.
7. அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி விடவும்.
8. அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துப் பிரட்டி விடவும்.
9. அதில் அவரைக்காய், உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வேக விடவும்.
10. தண்ணீர் வற்றிக் காய் வெந்ததும், மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.