கேரட் பொறியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கேரட் - 1/2 கிலோ
2. பெரிய வெங்காயம் - 1
3. தக்காளி - 1
4. பச்சை மிளகாய் - 2
5. பூண்டு - சிறிது
6. கடுகு உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
8. பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி
9. தேங்காய் துருவல் - சிறிது
10. கருவேப்பிலை - சிறிது
11 மல்லித்தழை - சிறிது
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கேரட்டை மிக சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவித் தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
2. அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுமார் 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து பிறகு தண்ணீரை வடிகட்டித் தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மல்லி இலை இவைகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கித் தனியாக வைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் நல்லெண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில் வைக்கவும்.
5. எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் கடுகு உளுத்தம் பருப்பு போடவும். கடுகு நன்றாக வெடித்ததும், பெருங்காயப்பொடி சேர்க்கவும்.
6. அதில் கருவேப்பிலையைப் போட்டு உடன் நறுக்கி வைத்துள்ள பூண்டுத் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
7. பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போன்றவைகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.
8. கடைசியாக, வேக வைத்துத் தயாராக வைத்துள்ள கேரட்டை போட்டு நன்றாகக் கிளறவும். பின்னர் மூடியிட்டு ஐந்து நிமிடம் வரை மிதமான தீயில் வைக்கவும்.
9. தேங்காய் துருவலை போட்டு மிக நன்றாகக் கிளறி இறக்கி விடவும்.
10. பிறகு நறுக்கி தயாராக வைத்துள்ள மல்லித் தழையைப் போட்டு வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.