கருணைக்கிழங்கு மசியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தக்காளி - 2 எண்ணம்
2. கருணைக்கிழங்கு - 3 எண்ணம்
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
10. இஞ்சி - சிறிது
11. கருவேப்பிலை - சிறிது
12. மல்லித்தழை - சிறிது
13. உப்பு - தேவையான அளவு
14. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. கருணைக்கிழங்கைக் குழைவாக வேக வைத்துத் தோலுரித்து அதை மசித்து வைக்கவும்.
3. தக்காளியைச் சிறு துண்டுகளாக்கி, இஞ்சி, கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
6. அதனுடன், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும்.
7. பின் அதில் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்துக் கிளறவும்.
8. அதனுடன் மசித்த கருணைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
9. கடைசியாக 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.