இறால் ஊறுகாய்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. இறால் – 1/4 கிலோ
2. இஞ்சிப் பூண்டு விழுது 2 தேக்கரண்டி
3. மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
5. நல்லெண்ணெய் – 200 கிராம்
6. வினிகர் – 1/2 கப்
7. உப்பு – 1 ( அ) 11/2 தேக்கரண்டி
வறுத்துப் பொடிக்க:
8. கடுகு – 1 தேக்கரண்டி
9. சோம்பு – 1 தேக்கரண்டி
10. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி.
செய்முறை:
1. இறால் மீனைச் சுத்தமாகக் கழுவி வைக்கவும்.
2. சுத்தம் செய்த இறால் மீனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், இஞ்சிப் பூண்டு விழுது பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
3. ஒரு கடாயில் பாதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இறால் மீனைப் போட்டு நன்கு சிவக்கப் பொரித்து ஆற விடவும்.
4. இறாலை பொரித்த எண்ணெயுடன் மீதி எண்ணெய்யை ஊற்றிச். சூடானதும் இஞ்சிப் பூண்டு விழுதைப் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
5. அடுத்து பொரித்த இறால், மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் போட்டு ஐந்து நிமிடம் கிண்டி விடவும்.
6.பின்பு வினிகர், உப்பு சேர்த்து இறக்கி விடவும்.
7. வறுத்து பொடித்த பொடியை மேலாகப் போட்டுக் கிளறி விடவும்.
8. பின்னர் அதை ஆற வைத்துப் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
9. ஊறுகாய்க்கு மேலே சிறிது உயரத்திற்கு எண்ணெய் இருக்க வேண்டும்.
10. பாட்டிலின் வாயை வெள்ளைத் துணியால் மூடி மூன்று நாள் கழித்துப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: இந்த ஊறுகாய் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.