காய்கறி ஊறுகாய்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கேரட் - 100 கிராம்
2. பீன்ஸ் - 100 கிராம்
3. உருளைக்கிழங்கு - 2 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
5. சௌசௌ - 1 எண்ணம்
6. தக்காளி - 100 கிராம்
7. மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
8. பெருங்காயத் தூள் - 1 மேசைக்கரண்டி
9. நல்லெண்ணெய் - 100 கிராம்
10. கடுகு - 2 மேசைக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. காய்களை நன்றாகக் கழுவித் துடைத்துச் சிறிது சிறிதாய் வெட்டிக்கொள்ளவும்.
2. பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் கடுகைப் பொரித்து எடுக்கவும்.
3. கடுகு பொரிந்தவுடன் வெட்டிய காய்களை எண்ணெய்யில் போட்டு நன்றாக வதக்கவும்.
4. பாதி வதங்கிய பிறகு, அதில் மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. காய்கள் நன்றாக வதங்கியவுடன் எண்ணெய் தளர்ந்து வரத் தொடங்கும்.
6. காய்கள் வெந்தவுடன் ஆறவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.