வரகு பச்சைமிளகாய் வடகம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. வரகு மாவு - 2 கப்
2. ஜவ்வரிசி - 1/2 கப்
3. பச்சைமிளகாய் விழுது - 2 தேக்கரண்டி
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
6. எலுமிச்சைச் சாறு - 2 மேசைக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் வரகு மாவு, ஊற வைத்த ஜவ்வரிசி, பச்சைமிளகாய் விழுது, சீரகம், பெருங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை நீரில் கலக்கவும்.
3. அதனை அடுப்பில் வைத்துக் கிளறி, வெந்ததும் இறக்கி வைக்கவும்.
4. அம்மாவைக் கரண்டியால் எடுத்து சுத்தமான வெள்ளைத் துணியில் ஊற்றி வெயில் நன்குக் காய விடவும்.
5. காய்ந்த வற்றலை காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்துத் தேவையான போது எடுத்து எண்ணெயில் பொரிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.