ரவா கிச்சடி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 1 கப்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் - 1 1/2 கப்
4. தக்காளி - 1 எண்ணம்
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
7. கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
10. நெய் - 5 மேசைக்கரண்டி
11. கருவேப்பிலை - சிறிது
12. மல்லித்தழை (நறுக்கியது) - 1/4 கப்
செய்முறை:
1. உளுத்தம் பருப்பையும் கடலைப் பருப்பையும் 1 மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
2. தண்ணீரை ஒரு அடுப்பில் தனியாகக் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சூடு செய்து தாளிக்க வேண்டியப் பொருட்களைச் சேர்க்கவும்.
4. ஊற வைத்தப் பருப்புகளைத் தண்ணீரை நன்கு வடித்துச் சேர்க்கவும். கடைசியாகக் கருவேப்பில்லை சேர்க்கவும்.
5. நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், பொடியாக நறுக்கிய காய்கறிகள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
6. அதற்கு மட்டும் தேவையான உப்பு சேர்த்துச் சில நிமிடங்கள் வதக்கவும்.
7. மஞ்சள் தூள், மல்லித்தழை, ரவை சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
8. மேலும் ஒரு மேஜைக்கரண்டி நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
9. கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் கிளறவும்.
10. நன்கு தண்ணீர் வற்றிக் கூழ் போல ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
11. மிதமான தீயில் 10 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். இடையில் ஒருமுறை நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து ஒரு முறைக் கிளறவும்.
12. கிச்சடி வெந்தவுடன் ஒட்டாமல் அல்வா அல்லது கேசரி போல வரவேண்டும். இல்லை என்றால் மேலும் எண்ணெய் சேர்த்துக் கிளறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.