மரவள்ளிக் கிழங்கு மசாலா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மரவள்ளிக் கிழங்கு - 500 கிராம்
2. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
3. இஞ்சி - 1 துண்டு
4. பூண்டு - 8 பல்
5. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
6. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
9. கடுகு - 1 தேக்கரண்டி
10. மிளகு - 1 தேக்கரண்டி
11. கருவேப்பிலை - சிறிது
12. மல்லித்தழை - சிறிது
12. எண்ணெய் - தேவையானஅளவு
செய்முறை:
1. மரவள்ளிக் கிழங்கைத் தோல் உரித்து, இட்லிச் சட்டியில் தண்ணீர், கல் உப்பு, மரவள்ளிக் கிழங்குத் துண்டுகள் சேர்த்து 15 நிமிடம் வேக வைக்கவும்.
2. வேகவைத்த கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்பு, மிளகு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
6. அதில் நறுக்கிய மரவள்ளிக் கிழங்கு சேர்த்து வதக்கி, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.