சேமியா கொழுக்கட்டை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சேமியா - 200 கிராம்
2. தேங்காய் - 1 எண்ணம்
3. பால் - 2 கப்
4. அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி
5. வெங்காயம் - 100 கிராம்
6. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
9. எள் - 1/2 தேக்கரண்டி
10. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை - சிறிது
12. எண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும்.
2. வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
3. தேங்காயைத் துருவி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் சேமியாவை வறுத்து ஆற வைக்கவும்.
5. ஆறிய பாலில் வறுத்த சேமியாவை சுமார் முப்பது நிமிடங்கள் ஊற வைக்கவும்.
6. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
7. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிள காய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
8. அத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும்.
9. பாலில் ஊறிய சேமியா, உப்பு, அரிசி மாவு, எள்ளு, சீரகம் ஆகிய வற்றையும் அதில் கலக்கவும்.
10. கையினால் நன்கு மசித்து கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
11. ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.