ஓலைக் கொழுக்கட்டை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பனை ஓலை (நடுப்பகுதி) - 15 எண்ணம் (5 அங்குலம் நீளமுடைய சிறிய துண்டுகளாக)
2. பச்சரிசி மாவு - 3 கப்
3. கருப்பட்டித்தூள் - 2 கப்
4. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
5. சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி
6. தேங்காய்த் துருவல் - 1 கப்
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கருப்பட்டித் தூளைத் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
2. பச்சரிசி மாவுடன் ஏலக்காய்த் தூள், சுக்குப்பொடி, தேங்காய்த் துருவல், காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டிச் சாறு போன்றவற்றைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
3. மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக இருக்கும்படி சிறிது நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
4. ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க நார் அல்லது நூல் கொண்டு அதைக் கட்டி வைக்கவும்.
5. மாவு அனைத்தையும் இருக்கும் ஓலையில் வைத்துத் தயார் செய்து வைக்கவும்.
6. பின் அந்த மாவு வைத்த ஓலைகளை இட்லிச்சட்டியில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
7. ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.