தேங்காய்ப் பூரணம் கொழுக்கட்டை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி மாவு – 1 கப்
2. தண்ணீர் – 2 கப்
3. நெய் – 2 தேக்கரண்டி
4. தேங்காய்த் துருவல் – 1 கப்
5. பொடித்த வெல்லம் – 3/4 கப்
6. ஏலக்காய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
7. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. வாணலியில் தண்ணீர், எண்ணெய், உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
2. கொதி வந்ததும் மிதமான தீயில் அரிசி மாவைப் போட்டுக் கட்டியாகி விடாமல் கிளறவும்.
3. மாவு கெட்டியானவுடன் கீழே இறக்கி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் நெய்யைச் சூடாக்கி, தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இதுதான் தேங்காய்ப் பூரணம்.
5. வேகவைத்த அரிசி மாவைக் கட்டி இல்லாமல் பிசைந்து, அதிலிருந்து ஒரு சிறு உருண்டை எடுத்து, எண்ணெயைத் தொட்டுக்கொண்டு, கை விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் எள்ளுப் பூரணம் வைத்துக் கொழுக்கட்டையாகச் செய்துகொள்ளவும்.
9. கொழுக்கட்டைகளை இட்லிச்சட்டியில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.