நவதானிய சுண்டல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை, சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி (அனைத்தும் முளைகட்டியது) - தலா 4 மேசைக்கரண்டி
2. கடுகு - 1/2 தேக்கரண்டி
3. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
4. கறிவேப்பிலை - சிறிது
5. எண்ணெய் - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு.
அரைக்க:
7. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
8. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
9. சோம்பு - 1/4 தேக்கரண்டி
10. பட்டை - சிறிய துண்டு
11. இஞ்சி - சிறிய துண்டு.
செய்முறை:
1. முளைகட்டிய தானியங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.
2. அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் வெந்த தானியங்கள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
5. பின்னர் அதனுடன் அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும்.
6. பச்சை வாசனை போனதும் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.