பட்டாணி மசாலா சுண்டல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காய்ந்த பட்டாணி – 1 கப்
2. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
3. புதினா - சிறிதளவு
4. மல்லித்தழை – சிறிதளவு
5. சீரகம் – 1/4 தேக்கரண்டி
6. எண்ணெய் - – தேவையான அளவு
7. உப்பு – தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
8. மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
9. பட்டை – சிறிய துண்டு
10. ஏலக்காய் - 1 எண்ணம்
11. கிராம்பு – 1 எண்ணம்
12. சோம்பு – 1/4 தேக்கரண்டி.
செய்முறை:
1. காய்ந்த பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவிடவும்.
2. ஊறவைத்த பட்டாணியைத் தண்ணீர் நீக்கி, புதிய தண்ணீர் ஊற்றிக் குக்கரில் போட்டு வேக வைக்கவும்.
3. பொடிக்க வேண்டிய பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.
4. வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, சீரகம் சேர்த்துத் தாளித்து, புதினா, மல்லித்தழை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் வேகவைத்த பட்டாணி, உப்பு, வறுத்தப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
6. கொஞ்சம் நீர் தெளித்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: தேவையெனில் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.