தட்டப்பயறு சுண்டல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. தட்டப்பயறு - 1 கப் (200 கிராம்)
2. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
3. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
4. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
7. மிளகாய் வத்தல் - 2 எண்ணம்
8. கறிவேப்பிலை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் தட்டப்பயறை நன்றாகக் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊறிய பயறு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
3. நீராவி அடங்கியதும் மூடியைத் திறந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
4. அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மிளகாய் வத்தல், காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.
5. பிறகு அதில், கடுகு உளுந்து போட்டுத் தாளிக்கவும்.
6. கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, தட்டப்பயறு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
7. கடைசியாகத் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.