கர்நாடகா கோவில் சுண்டல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கொண்டைக்கடலை - 1/2 கோப்பை
2. பச்சை வேர்க்கடலை - 1/2 கோப்பை
3. தேங்காய்த் துருவல் - 1/2 கோப்பை
4. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
7. கடுகு - 1 தேக்கரண்டி
8. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
9. பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
10. நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிது
11. கறிவேப்பிலை - சிறிது
12. மல்லித்தழை - சிறிது
13. தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலையையும் சுத்தம் செய்து, வெதுவெதுப்பான தண்ணீரில் சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊற வைத்தத் தண்ணீரை வடித்து விட்டு, அதைக் குக்கரில் போட்டு, அதனுடன் மஞ்சள்தூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து மூடி மிதமான நெருப்பில் 7 விசில் வரை வைத்துக் குழையாமல் வேகவைக்கவும்.
3. ஒரு கடாயில், தேங்காயெண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்து வெடித்ததும், உளுந்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
4. அதன் பிறகு, உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. வேகவைத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலையைச் சேர்த்து வதக்கி நன்கு கலந்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
6. கடைசியாக, தேங்காய்த் துருவல், மல்லித்தழையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.