காய்கறி சூப்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கோஸ் – 50 கிராம்
2. பீன்ஸ் – 50 கிராம்
3. கேரட் – 50 கிராம்
4. சோளமாவு – 3 தேக்கரண்டி
5. வெண்ணெய் – 1 தேக்கரண்டி
6. பட்டை, லவங்கம் – சிறிது
7. பிரியாணி இலை – சிறிது
8. மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
9. வெங்காயம் – 1எண்ணம்
10. தக்காளி – 1எண்ணம்
11. மல்லித்தழை - சிறிது
12. உப்பு – தேவையான அளவு .
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, கோஸ், பீன்ஸ், கேரட் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும், காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து லேசாக வதக்கவும்.
4. அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்கு வேக வைக்கவும்.
5. காய்கறிகள் வெந்ததும், சோளமாவைத் தண்ணீரில் கரைத்து வேகும் காய்கறியில் ஊற்றிக் கொதிக்க விடவும்.
6. சூப் பதத்திற்கு வந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து, மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.