பீன்ஸ் கேரட் சூப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பீன்ஸ் - 50 கிராம்
2. கேரட் - 50 கிராம்
3. சின்ன வெங்காயம் - 5 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. பச்சைமிளகாய் - 3 எண்ணம்
6. பட்டை - சிறு துண்டு
7. கிராம்பு - 2 எண்ணம்
8. ஏலக்காய் - 1 எண்ணம்
9. சோம்பு - 1/ 2 தேக்கரண்டி
10. பாசிப்பருப்பு - 50 கிராம்
11. மஞ்சள்தூள் - சிறிது
12. சீரகத்தூள் - 1/ 2 தேக்கரண்டி
13. எண்ணெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பாசிப்பருப்பை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு, மஞ்சத்தூள் சேர்த்து, அத்துடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துச் சூடானதும் அதில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
4. அத்துடன் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.
5. அதன் பிறகு பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
6. பிறகு வேகவைத்த பாசிப்பருப்பை அதில் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்து விடவும்.
7. அதனுடன் சீரகத்தூள் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
8. கடைசியாக அதனை இறக்கு வைத்து, அதில் மல்லித்தழை தூவி பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.