பச்சரிசி அல்வா
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி மாவு - 3 கப்
2. கடலை பருப்பு - 1 கப்
3. வெல்லம் -2 கப்
4. நெய்- 100 கிராம்
5. முந்திரிப் பருப்பு - 8 எண்ணம்
6. ஏலப்பொடி - சிறிது
செய்முறை:
1. பச்சரிசி மாவுடன் தண்ணீர் சேர்த்துத் தோசை மாவு பதத்திற்குக் கரைத்து வைக்கவும்.
2. சிறிதளவு நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்து வைக்கவும்.
3. ஒரு கனமான பாத்திரத்தில் கடலைப் பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
4. பருப்பு வெந்தவுடன் அதில் அரிசிமாவுக் கரைசலை ஊற்றிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
5. மாவு வெந்தவுடன், தண்ணீர் கையில் மாவைத் தொட்டுப் பார்த்தால் ஒட்டாமல் இருக்கும்படியான பதம் வைத்துக் கொள்ளவும்.
6. வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டவும்.
7. வெல்லத்துடன் கரைத்த தண்ணீரை சிறிது நேரம் அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்து, வெந்த அரிசிமாவுடன் சேர்த்துக் கிளறவும்.
8. முந்திரி , ஏலப்பொடி, நெய் சேர்த்துக் கிளறி விடவும்.
9. பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும்.
10. ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த பச்சரிசி அல்வாவை ஊற்றி, ஆறிய பின்பு பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.