இளநீர் கடல்பாசி இனிப்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கடல் பாசி - 10 கிராம்
2. இளநீர் - 3/4 டம்ளர்
3. இளநீரில் இருக்கும் வழுக்கைத் தேங்காய் - சிறிது
4. சர்க்கரை - தேவையான அளவு
5. பாதாம் - 1 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. ஒரு வாய் அகலமாக உள்ள சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கிளறி விட்டுக் கொண்டேக் கொதிக்க விடவும்.
2. நன்கு கொதித்துக் கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
3. இறக்கி வைத்திருக்கும் கடல்பாசி கலந்த தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.
4. சதுரமாக உள்ள பாத்திரத்தில் வடிகட்டிய தண்ணீரை ஊற்றி அதில் இளநீரைச் சேர்த்துக் கலந்து அதில் உள்ள வழுக்கையை கரண்டியால் சுரண்டி மேலேத் தூவி விடவும்.
5. அடுத்து அதன் மேல் பாதாமை தூவவும்.
6. சூடு ஆறியதும் லேசாகக் கெட்டி ஆகும். அப்போது அந்தப் பாத்திரத்தை ப்ரிட்ஜில் வைக்கவும்.
7. கடல் பாசி நன்கு கெட்டியாக மாறி குளிர்ச்சியடைந்ததும் எடுத்து விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.