மில்க் அல்வா
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பால் – 1 லிட்டர்
2. சர்க்கரை – 200 கிராம்
3. ஏலக்காய்த்தூள் – 1/4 தேக்கரண்டி
4. எலுமிச்சைச்சாறு – 1/2 தேக்கரண்டி
5. குங்குமப்பூ – 1 சிட்டிகை
6. மைதா மாவு – 30 கிராம்
7. நெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
2. அதிலிருந்து 750 மி.லி. பாலைத் தனியே எடுத்து எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துப் பாலைத் திரிய வைத்து, ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் திரிந்த பாலை ஊற்றி நன்றாக வடிக்கவும்.
3. தண்ணீர் முற்றிலும் வடிந்த பின்பு, லேசாகத் தண்ணீர் சேர்த்துப் பனீரை வீணாக்காமல் துணியிலே எலுமிச்சை வாடை போகும் வரை அலசவும். பின்பு இறுக்கப் பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.
4. அடிகனமான பாத்திரத்தில் மீதியுள்ள பால், மைதா சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.
5. அத்துடன் சர்க்கரை சேர்த்துக் கிளறி, சர்க்கரை கரைந்ததும் அதில் நெய், பனீரை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.
6. கலவைத் திரண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலந்து இறக்கவும்.
7. அகலமானத் தட்டில் நெய்யைத் தடவி, கிளறிய கலவையை கொட்டிப் பரப்பி விட்டுச் சூடு ஆறியதும் விருப்பமான வடிவில் வெட்டி அலங்கரித்துப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.