இனிப்பு துக்கடா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மைதா - 1 கப்
2. ரவா - 2 மேசைக்கரண்டி
3. சர்க்கரை - 1 கப்
4. பொடித்த சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
5. சமையல் சோடா - 1 சிட்டிகை
6. உப்பு - 1 சிட்டிகை
7. ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
8. நெய் - 2 தேக்கரண்டி
9. வெதுவெதுப்பான பால் - 1/2 கப்
10. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. மைதா, ரவா, பொடித்த சர்க்கரை, வெண்ணை, சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்து கொள்ளவும்.
2. அதில் வெதுவெதுப்பான பாலை சிறிது சிறிதாக விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும். குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.
3. ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக இடவும். கத்தியால் குறுக்கும், நெடுக்கும் கோடிட்டு, சிறு சதுர வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.
4. எல்லா மாவையில் இப்படியே செய்து, வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாகப் போட்டு வைக்கவும்.
5. ஒரு வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணையில் விட்டு சூடாக்கவும்.
6. எண்ணை காய்ந்ததும், செய்து வைத்திருக்கும் "துக்கடாவை" கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
7. ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டுக் கொதிக்க விடவும்.
8. சர்க்கரை கொதித்து, ஒரு கம்பி பாகு பதத்திற்கு வநததும், ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கிளறி விட்டு, அடுப்பை அணைத்து விடவும்.
9. சர்க்கரை பாகில் பொரித்து வைத்துள்ள துக்கடாவைப் போட்டு, பாகு அதன் மேல் நன்றாகப் படும்படி கிளறி எடுத்து, ஒரு தட்டில் கொட்டி, தனித்தனியாகப் பரப்பி விடவும்.
10. சற்று நேரத்தில், சர்க்கரைப் பாகு துக்கடாவின் மேல் படிந்து விடும். காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.