கோதுமை அல்வா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சர்க்கரை - 2 1/2 கப்
2. நெய் - 1/2 கப்
3. எண்ணெய் - 1/4 கப்
4. எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி
5. ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
6. கேசரி பவுடர் - 2 சிட்டிகை
7. முந்திரிப் பருப்பு - 20 கிராம்
8. பாதாம் பருப்பு - 20 கிராம்
9. பிஸ்தா - 10 கிராம்
10. வெள்ளரி விதை - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. கோதுமையைக் கழுவி முதல் நாள் இரவே நீரில் ஊற வைக்கவும்.
2. மறுநாள் நீரை வடித்து, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்துச் சிறிது சிறிதாக நீர் விட்டு நன்றாக அரைக்கவும்.
3. அதை எடுத்து சிறு கண்ணுள்ள வடிதட்டியில் போட்டு கரண்டியால் அழுத்திப் பாலை வடிக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்துப் பாலை வடிகட்டவும்.
4. இது போல் மூன்று நான்கு முறை பாலை வடித்து எடுத்து, இரண்டு மணி நேரம் தனியாக வைக்கவும்.
5. பாலின் மேலாக நீர் தெளிந்திருக்கும். இதை பால் சிதறாமல் வடிகட்டவும்.
6. மீண்டும் அரை மணி நேரம் வைத்திருந்து, மேலே தெளியும் நீரை வடித்துவிடவும்.
7. முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளின் கலவையை சிறிதளவு நெய்யில் வறுத்தெடுக்கவும்.
8. எண்ணெய், நெய்யைக் கலந்து கொள்ளவும்.
9. நான்ஸ்டிக் கடாயில் சர்க்கரை, கோதுமைப்பால், ஒரு கரண்டி எண்ணெய்-நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.
10. கோதுமைப்பால் கெட்டியாக வரும்போது மீண்டும் எண்ணெய் - நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.
11. கோதுமைப் பால் கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வரும்போது, சிறிதளவு தண்ணீரில் கரைத்த கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரைக் கிளறவும்.
12. முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அல்வா கையில் ஒட்டாமல் உருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.
13. நெய் தடவிய தட்டில் பரத்தி சுடச்சுடவோ அல்லது ஆறிய பிறகோ துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.