தேங்காய் பர்பி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பால் - 1 லிட்டர்
2. தேங்காய்த்துருவல் - 1 கப்
3. சர்க்கரை - 1 கப்
4. ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
5. நெய் - 1 மேசைக்கரண்டி
6. முந்திரி (நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. துருவிய தேங்காயையும் சர்க்கரையையும் பாலுடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள்.
2. நன்கு சேர்ந்து சுருண்டு வரும்வரை கிளறினால், பூ பூத்தது போல் பொங்கி வரும். அப்போது நெய், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
3. நெய் தடவிய தட்டில் அதைக் கொட்டிப் பரப்பி, வில்லைகள் போடுங்கள்.
குறிப்பு:
* தேங்காயைத் துருவும்போது, ஓட்டில் இருக்கும் கறுப்பு வராமல் துருவவேண்டும்.
* தேங்காய்ப்பூவை, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ஒரு முறை அரைத்து எடுத்துக் கொண்டால் மிருதுவாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.