அசோகா அல்வா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பருப்பு -1 கோப்பை
2. சீனி – 1 1/4 கோப்பை
3. கோதுமை மாவு - 2 மேஜைக்கரண்டி
4. நெய் - 3 மேஜைக்கரண்டி
5. ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
6. உணவுக்கான மஞ்சள் நிற வண்ணப்பொடி (விரும்பினால்) – 1 சிட்டிகை
செய்முறை:
1. பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து 1 கோப்பை தண்ணீர் விட்டு, மையாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
2. வேகவைத்த பாசிப்பருப்பை நன்கு கடைந்து கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
4. அதே வாணலியில் கோதுமை மாவு சேர்த்து நன்கு பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவேண்டும்.
5. பிறகு வேகவைத்து கடைந்துவைத்துள்ள மை போன்ற பாசிப்பருப்பு விழுதை சேர்த்து அத்துடன் நெய், சர்க்கரை மற்றும் உணவுக்கான வண்ணப்பொடி சேர்த்துக் கிளறவும்.
6. கெட்டியாக வரும் வரை நன்கு கிளறவும், இடையேச் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும்.
7. அல்வா பாத்திரத்தில் ஒட்டாது திரண்டு வரும் சமயம் மீதமுள்ள நெய், வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.