பாசிப்பருப்பு பக்கோடா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பருப்பு - 1/2 கப்
2. பெரிய வெங்காயம் (பெரியது) - 1 எண்ணம்
3. பச்சைமிளகாய் - 2 எண்ணம்
4. இஞ்சி - சிறிது
5. மல்லி - 1 தேக்கரண்டி
6. கறிவேப்பிலை - ஒரு கொத்து
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், பச்சை மிளகாயைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
2. இஞ்சியைத் துருவிக் கொள்ளவும்.
3. பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
4. அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.
6. இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.