அவல் உருண்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சிவப்பு கைக்குத்தல் அவல் - 1 கப்
2. தேங்காய் (பற்களாக நறுக்கப்பட்டது) - 1 தேக்கரண்டி
3. வெல்லம் - 3/4 கப்
4. ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
5. வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
6. நெய் - 50 மி.லி.
7. எண்ணெய் - 50 மி.லி.
செய்முறை:
1. அவலைச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வாணலியில் நெய், எண்ணெய்யை ஒன்று சேர்த்து வாணலியில் ஊற்றிச் சூடாக்கவும்.
3. அதில் சுத்தம் செய்த அவலை சேர்த்து, நன்கு பொரித்து எடுக்கவும்.
4. வாணலியில் சிறிது நெய்யை ஊற்றி அதில் தேங்காய்ப் பற்களை வதக்கி எடுக்கவும்.
5. வதக்கிய தேங்காயைப் பொரித்த அவலுடன் கலந்து, வெண்ணெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
6. வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும்.
7. பாகை அவல் கலவையில் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.