காரப் பூந்தி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 1 கப்
2. அரிசி மாவு - 1 கப்
3. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
4. எண்ணெய் - தேவையான அளவு
5. உப்பு - தேவையான அளவு
6. கறிவேப்பிலை - சிறிது
7. நெய் - 1 தேக்கரண்டி
8. பூண்டு - 5 பற்கள்.
செய்முறை:
1. அரிசி மாவு, கடலை மாவு, உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய்யைக் காய வைக்கவும்.
3. எண்ணெய் காய்ந்ததும் பூந்திக் கரண்டியை எண்ணெய்க்கு நேராக மேலே பிடித்துக் கொண்டு ஒரு கரண்டி மாவை எடுத்துப் பூந்திக்கரண்டி மேல் ஊற்றவும்.
4. மாவுக் கரண்டியின் அடிப் புறத்தால், பூந்தி கரண்டியின் மேல், மாவை வேகமாக அழுத்தித் தேய்க்கவும்.
5. மாவு எண்ணெயில் முத்துக்கள் போல் விழும். அதை அரிக்கரண்டியால் கிண்டி விடவும்.
6. எண்ணெயில் நுரை அடங்கி வரும் போது பூந்தியை அரித்து எடுத்து எண்ணெய்யை வடிய வைக்கவும்.
7. பூந்தியைக் காகிதத்தில் கொட்டி எடுத்தால் எண்ணெய் நன்றாக நீங்கி விடும்.
8. இந்தப் பூந்தியில் மிளகாய்த் தூள், உப்பு கலந்து பிசறி வைக்கவும்.
9. கொஞ்சம் கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை நெய்யில் வறுத்துப் பொடித்துப் பூந்தியின் மேல் போடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.