வள்ளலார் உணவு மாறுபாட்டினாலும், கவனக்குறைவு மற்றும் ஊழ் வகையாலும் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட பல அரிய மூலிகைகளையும், மருத்துவ முறைகளையும் திருவருட்பாவில் எழுதியிருக்கிறார். அதில் சில மூலிகையினால் கிடைக்கும் பயன்கள்:
கரிசலாங்கண்ணி – உடல் வசீகரம் அதிகரிப்பதுடன் உடல் வலுவடையும்.
பொற்றாலைக் கையாந்தகரை – உடல் வலுவாகும்.
தூதுவளை – சளித்தொல்லைகளைப் போக்கி புத்தி அதிகரிக்கச் செய்யும்.
வல்லாரை – காம உணர்வுகளை அகற்றி ஞான உணர்வு அளிக்கும். ஞாபகத்திறன் அதிகரிக்கும்.
புளியாரை – காயசித்தி, பித்தமர்த்தினி
பொன்னாங்கண்ணி – கண்ணொளி, வெப்பசமனி
அரைக்கீரை – சுரம் போக்கும்
அகத்தி – வேக்காடு போகும்
முசுமுசுக்கை – க்ஷயமர்த்தனி
கீழாநெல்லி – காமாலை போக்கி, பித்தம் போக்கி
மணத்தக்காளி – தணலாற்றி
துளசி – தோசம் போக்கி
முடக்கொத்தான் – வாதம் போக்கி
இருவாட்சி – ரத்த பித்தம் போக்கி
செண்பகம் – பருக்கள் போக்கி
குப்பைமேனி – உப்புக்கட்டு
பொடுதலை – வயிற்றுக் கடுப்பு, போக்கும், வெட்டை போக்கும், நீரொழுக்குப் போக்கும்
குமட்டி – வாதம் மாற்றும்
கண்டங்கத்தரி – சுவாச மர்த்தனி
சிறுவழுதலை – சுவாச காச மர்த்தனி
கொன்றை – கிருமி மர்த்தனி
விளா – பித்தம் போக்கி
பாகல் – பாஷான தோச மர்த்தனி
அத்தி – பெரும்பாடு போக்கி, உஷ்ண சமனி
பூவரசு – சகல குஷ்டம் போக்கி
ஆடாதொடை – சுரம் போக்கி
வேம்பு – பித்தம் போக்கி
தாமரை – கண் குளிர்ச்சி
நந்தியாவட்டம் – கண்ணுக்குக் குளிர்ச்சி
எலுமிச்சை – பித்தம் போக்கி
முந்திரிப்பழம் – தோசம் போக்கி
திப்பிலி – தாது விருத்தி
வெற்றிலை – ஜீரணகாரி
சுண்டை – சுரம்போம்
பூசணி – ஊறல் போக்கும், வசீகரி
விலாமிச்சை – பித்தம் போக்கி
நன்னாரி – தேக சித்தி
சர்க்கரை – தாகம் போக்கி, மயக்கம் போக்கி
கரும்பு – கல்லுடைப்பு போக்கி
வெண்கரும்பு – க்ஷயம் போக்கி
முருங்கை – கண் ரணம் போக்கி
முருங்கைக் கீரை – மலம் போக்கி
பேயன் வாழை – காயசித்தி
பேயன் தண்டு – சர்வ விச நாசினி
பேயன் பழம் – ஜீரணகாரி, மலம் போக்கி
வாழைப்பூ – பெரும்பாடு போக்கி
இப்படி சுமார் 480 மூலிகைகள் குறித்தும் மருத்துவக் குறிப்புகள் குறித்தும் வள்ளலார் தெரிவித்துள்ளார்.