துறவு ஹபீப் ஆஷ்மி ஒரு நாள் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.
அங்கே தன உடைகளைத் தரையில் கழற்றி வைத்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கினார்.
அப்போது அங்கே வந்த ஒருவன் உடைகளைக் கண்டு யார் குளிப்பது எனப் பார்த்தான்.
ஆஷ்மி குளித்தஇடம் மறைவாக இருந்ததால் யாரோ கவனமில்லாது வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று எண்ணி அங்கேயே காவலுக்கு நின்றான்.
ஆஷ்மி வெகு நேரம் நீராடிய பின் கரைக்கு வந்தபோது அவன், “இப்படிப் பாதுகாப்பின்றி உடைகளை விட்டுச் செல்லலாமா? யாரேனும் களவாடிச் சென்றால் உங்கள் கதி என்ன?” என்று கேட்டான்.
ஆஷ்மி சிரித்துக் கொண்டே சொன்னார், “ஓஹோ,நான் உடைகளை, “அவன்” பொறுப்பில் விட்டுச் சென்றிருந்தேன். “அவன்” அந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுத்துவிட்டான் போலும்''
-சூபி கதை