ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது.
அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிகப் பெருமை.
ஒரு நாள் அந்தத் தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்தக் குரங்கிடம் தன் தோகையைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டது மயில்.
அதற்குக் குரங்கோ, "மயிலே! இந்தத் தோகையையும், அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னைத் தேடி வர வேண்டும். ஆனால் அந்தக் குயிலைப் பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கிறது. அழகாகப் பாடி மனிதர்களைச் சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலைக் கேட்டு மகிழ்கின்றனர். அவர்கக்ச் சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்தக் குயிலே இறைவனின் அற்புதப் படைப்பு " என்றது.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்க்ச் சென்று கத்தத் தொடங்கியது.
அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்துத் தோப்புக்குள் விரட்டினார்கள்.