மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு தம்பதியரில் மனைவிக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு நாள் வாழ்ந்த பிறகு தன்னுடைய கணவனுக்கு, தன்னுடனான வாழக்கை அலுப்பு தட்டி விட்டிருக்குமோ என்று... ஒருவேளை, தான் விலகிப்போய் விட்டால், கணவன் எப்படி நடந்து கொள்வான் என்பதைப் பார்க்க ஆர்வம் கொண்டாள்.
அன்று, தன் கணவன் வீடு திரும்பும் முன்னர், ஒரு சின்ன காகிதத்தில் ஒரு குறிப்பை எழுதி, அவன் பார்வையில் படும் இடத்தில் வைத்து விட்டுக் கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டாள்.
கணவன் வீடு திரும்பினான்.
மேசையின் மீது இருந்த குறிப்பைப் பார்த்தான்.
அந்தக் குறிப்பில், "உன்னுடனான எனது வாழ்க்கை சலித்து விட்டது. நான் உன்னை விட்டுச் செல்கிறேன். என்னைத் தேட வேண்டாம்" என்று எழுதியிருந்தது.
குறிப்பை படித்தவன், குறிப்பின் பின்புறத்தில் ஏதோ கிறுக்கி விட்டு, தன் அலைபேசியை எடுத்து யாருடனோ பேசினான்.
"கடைசியாக அவள் போய் விட்டாள். நமக்கு இருந்த ஒரு தடையும் நீங்கி விட்டது. நான் உன்னை சந்திக்க வருகிறேன். தயாராய் இரு"
போய்க்கொண்டே, கதவைச் சாத்தி விட்டு வெளியேறினான்.
அதனைப் பார்த்து அழுது புலம்பிக் கொண்டே அந்த மனைவி, கட்டிலுக்கு அடியிலிருந்து வெளியே வந்தாள்.
அந்தக் குறிப்பின் பின்னால், அவன் என்ன எழுதினான் என்று பார்க்க அந்தக் குறிப்பை எடுத்துப் படித்தாள்.
"ஏய்! பைத்தியம், நீ கட்டிலுக்கு அடியில் ஒளிஞ்சிருக்கிறதப் பார்த்துட்டேன். எனக்குப் பசிக்குது. கடைக்குப் போய் ரொட்டி வாங்கிட்டு வந்துடறேன். ரொட்டி ஆம்லெட் போட்டு சாப்பிடப்போறேன். உனக்கு ஏதாவது வேணும்னா, எனக்குப் போன் பண்ணு. உன்னை இந்த உலகத்திலே எதையும் விட அதிகமா நேசிக்கிறேன். அன்பு முத்தங்கள்!"
அவள் அவனுக்குப் போன் செய்து, அவளுக்கும் ரொட்டி ஆம்லெட் வாங்கி வரச் சொன்னாள்.