ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது, அங்கே மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த அப்பெண், நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களைப் பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள், நான் ஏதாவது சாப்பிடுவதற்குத் தருகிறேன்” என்று சொல்லி மூவரையும் அழைத்தாள்.
அதற்கு அம்மூவரும், “வீட்டில் உன் கணவர் இருக்கிறாரா?” என்று கேட்ட்டனர்.
அதற்கு அவள், அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளித்தாள் .
உடனே அவர்கள், அப்படியென்றால் உனது கணவர் வரும்வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறினர்.
மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்த பொழுது அவள் நடந்தவற்றை கூறினாள்.
அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொன்னார்.
அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைத்தாள்.
அதற்கு அவர்கள், “நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது” என்றனர்.
ஏன் அப்படி? என்று அவர்களிடம் கேட்டாள் அவள்.
அதற்கு அவர்களில் ஒரு முதியவர், இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும், நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் வந்து சொல் என்று அவளிடம் சொன்னார்.
அப்பெண் வீட்டினுள் வந்து கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறினாள்.
அதைக் கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது? என்று சொல்லி, நம் வீட்டிற்குச் செல்வத்தை அழைப்போம் என்றார்.
அவர் வந்தால், நம் வீட்டைச் செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் சொன்னார்.
அதைக் கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவித்து, ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்டாள்.
அங்கு நடப்பதை எல்லாம் காதில் கேட்டுக் கொண்டிருந்த, அந்த வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், “நாம் அன்பை ஏன அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பி விடுவார்” என்றாள்.
அதைக் கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையினை நிறைவேற்ற, அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்தனர்.
பிறகு, கணவன் மனைவியிடம், நம் மகள் விருப்பப்படி நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்றார்.
அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து, “உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வரலாம்” என்றாள்.
அதைக் கேட்ட அன்பு அவள் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினார்.
அவரைப் பின் தொடர்ந்து மற்ற இருவரும் அவருடன் வந்தனர்.
அதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?
நான் அழைத்தது அன்பை மட்டும்தானே? என்று ஆச்சர்யப்பட்டுக் கேட்டாள்.
அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், “நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியேதான் இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும்” என்றனர்.
அன்புதான் நம்மை அதிகம் மகிழ்ச்சியடைய வைக்கும்.