ஒரு முயல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து.
அந்த முயலுக்கு ஒரு பக்கம் வேடன் விரட்டுகிறான். இன்னொரு பக்கம் நாய்... மறுபக்கம் புலி... என எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிரிகள்.
சரி நாம் இவ்வுலகில் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்து, எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம்? என்று சிந்தித்துப் பார்த்தது. இறுதியாக...
குளத்தில் குதித்துத் தற்கொலை செய்து கொள்வோம் என்று சென்றது முயல்.
அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின.
முயல் சிந்தித்தது.
அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் இருக்கின்றனவே. அவைகளெல்லாம் தன்னம்பிக்கையுடன் உயிர் வாழும் போது நாம் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? என்று தன் முடிவை மாற்றிக் கொண்டது.
தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கியது.
தற்கொலை செய்து கொள்வதற்கு வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் ஏன் சாக வேண்டும்? வாழ்ந்துதான் பார்க்க வேண்டும்.