கல்லூரியில் பேராசிரியர், ஒரு மாணவனை கூப்பிட்டு போர்டுல உனக்கு பிடித்த உறவுமுறைகளாக முப்பது பேரை எழுது என்றார்.
மாணவன், “அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மனைவி, மகன், மகள், அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை, காதலி, நண்பன்” என்று முப்பது பேர்களை எழுதினான்.
பேராசிரியர், “இதில் மூன்று பெயரை அழிக்க வேண்டும். யாரை இழக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்தப் பெயர்களை அழித்துவிடு” என்றார்.
மாணவன், “காதலி, நண்பன், பக்கத்து வீட்டுகாரர்”என்று மூன்று பெயர்களை அழித்தான்.
பேராசிரியர் மறுபடியும் மூன்று பெயரை அழிக்க சொன்னார்.
மாணவன் இப்படியாக பேராசிரியர் சொல்லச் சொல்ல, ஒவ்வொருவராக அழித்தான்.
கடைசியாக அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என இவர்கள் பெயர் மட்டும் இருந்தது.
பேராசிரியர், “இதிலும் ரெண்டு பெயரை நீக்க வேண்டும். யாரை நீக்குவாய்?” என்றார்.
அங்கிருந்த மாணவர்கள் அனைவருக்கும் கோபம். ஆனால், பேராசிரியரை எதிர்த்துப் பேச முடியாமல் அமர்ந்திருந்தனர்.
மாணவன் வருத்தத்துடன், அப்பா, அம்மா பெயரை அழித்தான்.
பேராசிரியர் மறுபடியும் இன்னும் ரெண்டு பெயரை அழிக்க வேண்டும் என்றார்.
மாணவர்கள் அனைவருக்கும் கோபம் கூடியது. இருந்தாலும், அந்த மாணவன் யார் பெயரை அழிப்பான் என்று எல்லோரும் அவனையும் போர்டையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மாணவன் மிகுந்த சோகத்துடன், மகன், மகள் இருவர் பெயரையும் அழித்தான்.
கடைசியாக மனைவி பெயர் மட்டும் இருந்தது.
பேராசிரியரும், மாணவர்களும் ஆச்சரியத்துடன் அந்த மாணவனைப் பார்த்துக் கேட்டார்கள், “மகன், மகள் பெயரை அழித்து விட்டு... எதற்காக மனைவி பெயர் மட்டும் அழிக்கவில்லை...?”
அதற்கு மாணவன், “மகள் எப்படி இருந்தாலும், இன்னொரு வீட்டுக்கு போய் விடுவாள். மகன் அவன் மனைவி குழந்தை என வாழ்வான். கடைசி காலம் வரை என்னோடு வாழக் கூடியவள் என் மனைவி மட்டும்தான்” என்றான்.
வாழ்க்கைத் துணை மனைவி மட்டும்தான் நாம் இறக்கும் வரை நம்முடன் வாழ கூடிய ஒரே உறவு என்பதை அந்த மாணவன் உணர்ந்திருந்தான்.