இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

தியானம் கற்றுக் கொள்ள...


அந்த வாலிபன் ஒரு குருகுலத்தில் பணியாளாக வேலை செய்தான். மற்றவர்களைப் போல அவனுக்கும் தியானம் கற்றுக் கொள்ள ஆசை வந்தது. குருவிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.

குருவும் அவனுக்கு தியானம் கற்றுத் தருவதாகக் கூறினார். அவனை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அவனை அந்த அறையின் நடுவில் அமர வைத்தார். அவன் கண்களை மூடச் சொன்னார். அவனும் கண்களை நன்றாக மூடிக் கொண்டான். தான் சில மணி நேரம் கழித்து வருவதாகவும் அதுவரை கண்களைத் திறக்கக் கூடாது என்று கூறி அவனை அந்த அறையில் தனியாக விட்டுச் சென்றார் குரு.

சிறிது நேரம் கழித்து, அவனை வந்து பார்த்தார். அவன் தூக்கத்தில் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டார். இப்படியே அவன் அறைக்குத் தியானம் செய்ய வருவதும் தூங்குவதுமாக ஒரு வாரம் சென்றுவிட்டது.

அவன், தான் தியானத்தில் அமர்ந்தால் தனக்கு தூக்கம் வருகிறது என்று குருவிடம் புலம்பினான்.

குரு சிந்தித்தார். எப்பொழுதும் போல நாளைக்கு தியானம் செய்ய வருமாறு அவனிடம் கூறி அனுப்பினார்.

அடுத்த நாள் அந்த வாலிபன் தியான அறைக்கு வந்தான். குரு அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். வாலிபன் அவர் கையில் ஒரு கூடை இருப்பதை கவனித்தான். குரு அவனை அறையின் நடுவில் அமரச் சொன்னார்.

“நீ உண்மையிலேயே தியானம் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறாயா?” என்று கேட்டார் குரு.

“ஆம் குருவே!” என்று உடனே பதில் கூறினான் வாலிபன்.

“அப்படியென்றால் நான் அடுத்து கூறுவதைக் கேட்டு நீ பதற்றப்படக் கூடாது. நான் கூறும்படி நீ நடந்து கொண்டால் உனக்குத் தியானம் கைகூடும்”

“கண்டிப்பாக தாங்கள் கூறும்படி நடந்து கொள்கிறேன் குருவே” என்று உறுதியுடன் கூறினான் வாலிபன்.


அவனைவிட்டு அறையின் ஓரத்திற்குச் சென்றார் குரு. பிறகு கூடையைக் கீழே கவிழ்த்தார். ஒரு பாம்பு கூடையிலிருந்து கீழே விழுந்தது. வாலிபன் பதறிப் போனான். “குருவே என்ன இது?” என்று பயந்து போய் கேட்டான்.

“பயப்படாதே! இதுவே உனக்கு தியானத்தில் முதல் பாடம். இனிமேல் நீ கண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்ய வேண்டும். உன்னுடைய கவனம் அந்த பாம்பின் மீது இருக்க வேண்டும். உன்னுடைய கவனம் வேறு பக்கம் திரும்பினால், அந்த பாம்பு உன்னை நோக்கி நகரும். உன்னுடைய கவனம் அந்த பாம்பின் மீது இருந்தால் அது அதே இடத்தில் இருக்கும். நீ தியானத்தைத் தொடங்கலாம்” என்று கூறி விட்டுச் சென்றார் குரு.

வாலிபனுக்கு முதலில் பாம்பைப் பார்க்கப் பயமாக இருந்தது. பிறகு பாம்பு அவனை நோக்கி வராமல் அங்கேயேத் தன்னை பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான். கதவு இருக்கும் பக்கம் திரும்பினான். பாம்பு உடனே அவனை நோக்கி முன்னேறியது. பாம்பின் பக்கம் கவனத்தை செலுத்தினான். பாம்பு அங்கேயே நின்று கொண்டது. தன் நிலமையைப் புரிந்து கொண்டான் வாலிபன். பாம்பைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

குரு சிறிது நேரம் கழித்து அவனைக் காண அறைக்குள் நுழைந்தார்.

குரு அறைக்குள் நுழைந்ததைக் கூட அவன் கவனிக்கவில்லை. அவன் கவனமெல்லாம் பாம்பின் மீது இருந்தது. பிறகு பாம்பை எடுத்துக் கூடைக்குள் போட்டார். அப்போது தான் அவன் குரு இருப்பதையே உணர்ந்தான். குருவின் காலில் விழுந்தான். தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். குருவும் அவனை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார்.

“எந்த ஒரு செயலையும் முழுமையாகச் செய்வதற்குக் கவனம் மிக முக்கியம். கவனம் என்பது விழிப்புடன் இருப்பது. முதலில் நீ கண்களை மூடி அமர்ந்த போது தூங்கிப் போனாய். விழிப்புணர்வைக் கையாளும் முறை உன்னிடம் மந்தமாக இருப்பதைத் தெரிந்து கொண்டேன். உனக்குக் கவனச் சிதறல் இருப்பதால் உன்னுடைய கவனத்தை ஒரு மையப் புள்ளியில் நிலை நிறுத்தவே இந்தப் பாம்பின் உதவியை நாடினேன். நான் நினைத்தபடியே உன் உயிர் மீதுள்ள பயமும் தியானத்தின் மீதுள்ள ஆர்வமும் உன்னுடைய கவனத்தைப் பாம்பின் மீது நிலைநிறுத்தியது. உன்னையே அது மறக்கச் செய்தது.


இனிமேல் இந்தப் பாம்பு உனக்குத் தேவையில்லை. தியானம் என்பது ஒருவனின் உண்மையான இருப்பு. நீ தன்னிலையில் இருக்கும்போது, அதாவது, தியானத்தில் இருக்கிறபோது மற்ற எண்ணங்களை புறந்தள்ள உன் கவனத்தை ‘நான்’ என்கிற எண்ணத்தின் மீது வைத்துக் கொள். இதுதான் பாம்பு. இந்தப் பாம்பின் மீது கவனத்தைச் செலுத்தவிடாமல் பிற எண்ணங்கள் உன்னைக் கண்டிப்பாகக் கவர்ந்திழுக்கும். விழிப்புடன் இருக்கும் நீ ‘நான்’ என்ற எண்ணத்திலிருந்து கவனத்தைத் திசை திருப்பாதே. உன்னுடைய முழு கவனமும் ‘நான்’ எண்ணத்தில் லயித்துவிட்டால் பிற எண்ணங்கள் உன்னைத் தொந்தரவு செய்யாது. காலப்போக்கில் மற்ற எண்ணங்களிலிருந்து விடுபடும்போது, நான் என்ற எண்ணமும் கரைந்து தியானம், அதாவது உன்னுடைய உண்மையான இருப்பு வெளிப்படும். உன்னுடைய உண்மை நிலையே தியானம் என்பதை உணர்வாய்” என்று குரு அவனுக்குப் போதனை வழங்கினார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1233.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License