குளிர்பதன வசதி கொண்ட வாகனத்தில் மகன், தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், “அப்பா, உங்கள் வாழ்க்கையில் சொத்து சுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.
வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகேப் போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை, “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா?” இதன் வரலாறு தெரியுமா? இது, தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாகக் கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத்தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான், தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை. இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்குத் துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை.
அதனைப் புரிந்து கொண்ட மகனுக்கு, அடுத்து என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை.