இரண்டு மன்னர்களுக்குள் சண்டை நடந்தது.
வென்றவன் தோற்றவனிடம், “நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே” என்றான்.
வென்ற மன்னனின் காதலி, அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு, விடையைச் சரியாகச் சொன்னால்தான் நமக்குத் திருமணம் என்று சொல்லியிருந்தாள்.
ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? என்பதுதான் அந்தக்கேள்வி.
தோற்ற மன்னன் விடையை அறிந்து வருவதாகச் சொல்லிச் சென்றான்.
பலரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான். அவனுக்கு விடை கிடைக்கவில்லை.
கடைசியாகச் சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.
அவள், “நான் அந்தக் கேள்விக்கு விடை சொல்கிறேன். அதனால் அவனுக்குத் திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும். எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டாள்.
அவன் சொன்னான், “என்ன கேட்டாலும் தருகிறேன்”
சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள், “தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”
இப்பதிலை அவன் வெற்றி பெற்ற மன்னனிடம் சென்று சொன்னான்.
அந்த மன்னனும் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. தோற்றவனுக்கும் நாடு திரும்பக் கிடைத்தது.
அவன் சூனியக்காரக் கிழவியிடம் வந்தான். “வேண்டியதைக் கேள்” என்றான்.
அவள், “நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றாள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.
அடுத்து, சூனியக்காரக் கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.
அவள் சொன்னாள், “நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது, நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் போது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன். இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.
அவன் சற்றும் யோசிக்காமல், “இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; நீதான் முடிவு எடுக்க வேண்டும்” என்றான்.
அவள், “முடிவை என்னிடம் விட்டு விட்டதால், நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்!” என்றாள்.
ஆம்! பெண், அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும் போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள். அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!