இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

பொய் சொல்லாதவன்

ஒரு முறை தேவலோகத்தில் வசிஷ்ட முனிவர், "என் சீடன் மன்னன் அரிச்சந்திரன் சத்தியசந்தன். உண்மையே பேசுபவன். ஒரு பொய் கூடக் கூறாதவன்" என்று பெருமையுடன் கூறினார்.

வசிஷ்டரிடம் எப்போதும் பகைமை பாராட்டி வந்த விஸ்வாமித்ர முனிவர், "நான் அவனைப் பொய் பேச வைக்கிறேன். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் நான் எனது தவ வலிமை முழுவதையும் இழக்கத் தயார்" என்று சவால் விட்டார்.

பூவுலகிற்கு வந்த விஸ்வாமித்ரர் ஒரு இராட்சதனை தன் தவ வலிமையால் ஒரு காட்டுப் பன்றியாக மாற்றினார். அதனை அவர் அரிச்சந்திரனின் அழகிய பூந்தோட்டத்தை நாசமாக்கிவிட்டு வரும்படி ஏவினார். அதுவும் நந்தவனத்திற்குள் நுழைந்து செடிகொடிகளைப் பெயர்த்து, பாத்திகளைக் குடைந்து பாழாக்கியது. தோட்டக்காரர்களாலும், படை வீரர்களாலும் அதை அடக்க முடியவில்லை.

இச்செய்தி அரிச்சந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவனும் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு குதிரை மீதேறி அக்காட்டுப்பன்றியை துரத்திக் கொண்டு போனான். அது அங்கும் இங்கும் ஒடி போக்குக் காட்டியதேத் தவிர அகப்படவில்லை. அதைத் துரத்திக் கொண்டே வெகு தூரம் வந்து விட்டிருந்தான் அரிச்சந்திரன்.

மிகுந்த களைப்புற்ற அவன் அருகிலிருந்த ஆற்றின் நீரைப் பருகிவிட்டு, ஒரு பாறை மீதமர்ந்து ஓய்வெடுத்தான். அப்போது அங்கு வந்த ஒரு வயதான பிராமணர், அவனிடம் தர்ம சாஸ்திரங்கள் பற்றி விவரிக்கத் தொடங்கினார். ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் இப்படி ஒரு ஞானியா? என்று வியந்த அரிச்சந்திரன் அவரைப் பற்றி விசாரித்தான். அவர் தனக்கு ஒரு மகன் உள்ளான் என்றும், அவனுக்கு திருமணம் செய்யத் தன்னிடம் போதுமான பணம் இல்லை என்றும் வருத்தத்துடன் கூறினார்.

அவர் மீது இரக்கமுற்ற அரிச்சந்திரன், "கவலைப்படாதீர்கள். தலைநகரில் அரசவையில் என்னை வந்து பாருங்கள். உங்களுக்கு வேண்டிய செல்வத்தை நான் அளிக்கிறேன்" என்று கூறிவிட்டு தலைநகருக்குத் திரும்பினான். மறுநாள் அந்த பிராமணர் அரசவைக்குப் போய், "மன்னா! எனக்கு வேண்டிய செல்வத்தைக் கொடுப்பதாக வாக்களித்தாய். எனக்கு உன் நாடு, உன் அரண்மனை எல்லாம் வேண்டும்" என்றார். அரிச்சந்திரனும் தயங்காமல் அவர் கேட்டதை எல்லாம் தானமளித்து விட்டார்.

அந்தப் பிராமணர் வேறு யாருமில்லை; விஸ்வாமித்ரர்தான்.

தானம் பெற்றபின் அவர் அரிச்சந்திரனிடம், "மன்னா! நீ சொன்னபடி நான் கேட்டதையெல்லாம் கொடுத்துவிட்டாய். ஆனால் தானமளித்த பின் தட்சிணை கொடுக்க வேண்டுமே! அதையும் கொடு" என்றார். தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்ட அரிச்சந்திரனிடம் கொடுப்பதற்கு இப்போது ஒன்றுமே இல்லை. ஆயினும், அவர் கேட்கும் தட்சிணையைக் கொடுப்பதாகவும் ஆனால் அதற்கு சிறிது அவகாசம் கொடுக்கும்படியும் வேண்டினான்.


தன் மனைவி சந்திரமதியையும் மகன் லோகிதாசனையும் அழைத்துக் கொண்டு புண்ணிய நகரான காசிக்கு வந்தான். அங்கு வந்த விஸ்வாமித்ரர் அரிச்சந்திரனிடம், "ஏன் இவ்வளவு சிரமப்படுகிறாய்? தட்சிணை கொடுக்க இயலாது என்றே சொல்லியிருக்கலாமே" என்றார்.

அதற்கு அவன், "நான் சொன்ன சொல் தவறாதவன். எப்பாடுபட்டாவது தங்களுக்கு தட்சிணை கொடுத்துவிடுகிறேன்" என்றான்.

பிறகு அவன், ஒரு செல்வந்தரிடம் தன் மனைவியையும் மகனையும் அடிமைகளாக விற்றும், தன்னையே ஒரு மயான அதிகாரியிடம் விற்றும் அந்தப் பணத்தைப் பிராமணருக்கு தட்சிணையாகக் கொடுத்தான்.

அரிச்சந்திரனின் மனைவியும் மகனும் அந்த செல்வந்தரின் வீட்டு வேலைகளை மிகவும் சிரமப்பட்டு செய்தார்கள். அரிச்சந்திரனோ மயானத்தைக் காவல் காப்பதும் அங்கு எடுத்து வரப்படும் பிணங்களை எரிப்பது, பிணங்களை எரிக்கக் கட்டணம் வசூலிப்பது போன்ற பணிகளை செய்து வந்தான்.

ஒருநாள் லோகிதாசன் தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து இறந்துவிட்டான். துக்கம் தாங்காமல் அரிச்சந்திரனின் மனைவி இறந்து போன தன் மகனின் உடலை எரிக்க மயானத்திற்குக் கொண்டு சென்றாள்.

அங்கு காவல் காத்துக் கொண்டிருந்த அரிச்சந்திரன் அவளிடம் பிணத்தை எரிக்கப் பணம் கேட்டான். தன்னிடம் பணம் இல்லை என்று கூறி அழுதாள் அவன் மனைவி. அப்போதுதான் அது தன் மனைவி என்றும் இறந்தது தன் மகன் என்பதையும் கண்டான் அரிச்சந்திரன். லோகிதாசனை எரிக்கும் நெருப்பிலேயே விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வது என்று இருவரும் முடிவு செய்தனர்.

லோகிதாசனின் உடலுக்குத் தீ மூட்டிவிட்டு அந்த நெருப்பில் இருவரும் இறங்க எத்தனித்தபோது ஒரு பேரிடி கேட்டது. மறுகணமே லோகிதாசன் உயிர் பெற்றெழுந்தான்.


அப்போது விஸ்வாமித்ரர் அங்கு இந்திரன் முதலான தேவர்களுடன் வந்து, "அரிச்சந்திரா! பொய் பேசுவதில்லை என்ற உன் கொள்கையை உறுதியுடன் பின்பற்றினாய். உன் வாழ்வில் மிகுந்த சோதனைகளை சந்தித்த போதும் அதனை நீ கைவிடவில்லை. உன் புகழ் இவ்வுலகில் என்றென்றும் ஓங்கி நிற்கும்" என்று வாழ்த்தி அவன் நாட்டை அவனிடமே ஒப்படைத்தார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1274.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License