இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

காசிப்புலவர் அரிசங்கரர்


பாண்டிய நாட்டுக்கு ஒரு சமயம் பெரிய மனிதர் ஒருவர் வந்திருந்தார்.

அந்தப் பெரியவரின் பெயர் அரிசங்கரர் என்று கூறினார்கள். அவர் வடக்கேயுள்ள காசியைச் சேர்ந்தவர். நான்கு வேதம், ஆறு சாத்திரம், பதினெட்டுப் புராணம், இதிகாசம் எல்லாவற்றிலும் நல்ல தேர்ச்சியும் திறமையும் மிக்க அந்தப் பெரிய மனிதர், தம்முடைய அறிவைத் தாமேப் பெரிதாகப் போற்றிக் கொண்டார்.

தம்முடைய கல்வித் திறமையை நிலைநாட்டி எல்லா நாடுகளிலும் புகழ்க்கொடி நாட்டிக் கொள்ள வேண்டும் என்று அவர் எண்ணினார்.

இமயம் முதல் குமரி வரை தமக்கு எவரும் இணையில்லை என்று பெயரெடுக்க அவர் விரும்பினார்.

பரத கண்டத்தில் அக்காலத்தில் ஐம்பத்தாறு நாடுகள் இருந்தன. ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று, அங்குள்ள கற்றறிந்த புலவர்கள், சமய ஆசிரியர்கள் எல்லோரையும் வாதில் வென்று புகழ்க் கொடி நாட்டினார்.

ஒவ்வொரு நாட்டிலும் தாம் அடைந்த வெற்றியை நினைக்க நினைக்க, அவருக்குத் தற்பெருமை மிகுந்தது. “தனக்கு மிஞ்சிய அறிவாளி இந்த உலகத்திலேயே இல்லை” என்று எண்ணிக் கொண்டார்.

இந்த எண்ணம் வலுப்பெற்ற பின், அவர் மற்றவர்களை மதிக்காமல் நடந்து கொள்ளத் தொடங்கினார்.

சோழ நாட்டில் வாதியற்றி வென்ற பின், பாண்டிய நாடு வந்திருந்தார். பாண்டிய நாட்டுக்குப் பின் சேர நாட்டுக்குச் சென்று, தம் வெற்றியை நிலைநாட்டி விட்டுக் கன்னியாகுமரியில் கடலாடித் திரும்புவதென்று முடிவு செய்திருந்தார்.

மதுரை நகருக்கு அவர் வந்து சேர்ந்த போது, நகரெங்கும் அவரைப் பற்றியே பேச்சாக இருந்தது.

பரத கண்டத்துப் பேரறிஞர்; பல்கலையும் வல்ல புலவர், காசித் தலத்துக் கவிஞர், அறிஞர் அரிசங்கரர் வந்திருக்கிறார். அவரை வாதில் வெல்ல யாராலும் முடியாதாம். சங்கத்திலேத் தங்கத்தமிழாயும் சிங்கப் புலவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்றெல்லாம் மக்கள் பேசிக் கொண்டார்கள்.

புலவர்களுக்குச் சிறப்பளித்து வரவேற்கும் பாண்டிய மன்னன், அரிசங்கரரை வரவேற்றுப் பெருமைப்படுத்தினான்.

அரசவைக்கு வந்த அரிசங்கரர், தம் பெருமைகளை அரசனுக்கு எடுத்துக் கூறினார். தாம் நாடுதோறும் சுற்றிவரும் காரணத்தை விளக்கிச் சொன்னார். தம்முடன் வாதிட யாரும் வரலாம் என்று சவால் விடவும் அவர் தயங்கவில்லை.

அரசவையிலே நாற்பத்தொன்பது தமிழ்ப் புலவர்கள் இருந்தார்கள். அந்த நாற்பத்தொன்பது பேரும் நாற்பத்தொன்பது திருவிளக்குகளைப் போன்றவர்கள். அறிவுச்சுடர் ஒளிவிட்டு வீசும் திருமுகமும், குன்றென நிமிர்ந்த தோற்றமும், சிங்கத்தின் பெருமிதப் பார்வையும், அத்தனைக்கும் மேலே அடக்கம் நிறைந்த நெஞ்சும் உடைய அறிஞர்கள் அவர்கள்.

அரிசங்கரர் நெடிய உருவமும், நிமிர்ந்த தோற்றமும், தம்மை மிஞ்சிய புலவர் எவரும் இல்லை என்ற அகம்பாவ எண்ணமும், அந்த எண்ணத்தினால் ஏற்பட்ட அலட்சியப் பார்வையும் கொண்டு, பெருமதயானை போன்று, அவையிலே வீற்றிருந்தார்.

அரசவையிலே, புலவர்களின் அறிவுத் திறனை ஆராயும் அந்தப் போட்டியைக் காண மக்கள் வெள்ளம் போல் திரண்டிருந்தார்கள்.

பாண்டிய மன்னன் சங்கத்துப் புலவர்களை நோக்கிப் பேசினான்.

“காசிப்பெரும் புலவர் அரிசங்கரர் வந்திருக்கிறார். வாதிட்டுப் புகழிட்ட நாடு தோறும் சென்று வந்துள்ளார். இதுவரை சென்றுள்ள நாடுகளனைத்திலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். நம் பாண்டிய நாட்டிலும் தம் பெருமையையும், திறமையையும் நிலை நாட்டிச் செல்ல அவர் எண்ணியுள்ளார். புலவர்களே, உங்களில் யாராவது அவருடன் வாதிட விரும்புகிறீர்களா?” என்று கேட்டார் பாண்டிய மன்னர்.

ஆன்றவிந்தடங்கிய சான்றோர்களாகிய சங்கப் புலவர்கள் அனைவரும் வாய் திறவாது அமைதியாக வீற்றிருந்தார்கள்.

அவர்களில் முதுபெரும் புலவராக வீற்றிருந்த சாத்தனார் பாண்டித் திருதாடனை நோக்கிச் சில மொழிகள் புகன்றார்.

“மன்னவா! உன்னைப் போன்ற அரசர்கள் ஒருவரையொருவர் போரிட்டு வென்று புகழ் நாட்டலாம். ஆனால், புலவர்கள் தம் புகழை நிலைநாட்ட, வாதிட்டுப் போராட வேண்டியதில்லை. சங்கப் புலவர்கள் இதுநாள்வரை யாருடனும் வாதிட்டதில்லை. ஏன் ? வாது வழி தீது என்பதால்தான்! வென்றவர் எக்களிக்கவும், வெல்லப்பட்டவர் துக்க மிக்குறவும் செய்யும் வாதுக்குத் தமிழ்ப் புலவர்கள் எக்காலத்தும் ஒப்பியதில்லை. சூதும் வாதும் வேதனை செய்யும். அறிவுக்கு எல்லையில்லை. ஒருவர்க்கு ஒன்று எளிதாகவும், ஒன்று கடினமானதாகவும் இருக்கும். எதைக் கொண்டு அறிவை அசைக்க முடியும்?”

“திருவள்ளுவரை உலகம் உச்சி மீது வைத்துக் கொண்டாடுகிறது. அவர் யாருடன் வாதிட்டு இப்பெரும் புகழைப் பெற்றார் ? இரண்டு பேரிதிகாசங்களை இயற்றிய வான்மீகரும் வியாசரும் எங்கே போய் வாதிட்டார்கள்?”

சாத்தனாரின் இந்தத் தெளிவுரைகளை அரிசங்கரர் என்ற அந்தப் புலவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

"அச்சம் மேலிட்டதால் தமிழ்ப் புலவர்கள் வாதிட முன் வரவில்லை. வாதுக்குத் தப்ப, சாத்தனார் சரியான வழி கண்டுபிடித்து விட்டார்!” என்று ஏளனமாகக் கூறினார்.

தமிழ்ப் புலவர்கள் அமைதியாக இருந்தனர். ஆனால், பெருமக்களை எங்கிருந்தோ வந்த அவர் அலட்சியப்படுத்திப் பேசியதைக் கேட்டுக் குடிமக்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

அங்கு புலவர்களின் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் ஒருவனுக்கு மனம் துடித்தது. மதிவாணன் என்ற அவ்விளைஞன் மன்னனை நோக்கிக் கூறினான்.

‘மன்னர் பெருமானே ! சான்றோரை மதியாத தருக்காளராகவுள்ள இப்புலவர், வாதிட்டுத்தான் ஆக வேண்டுமென்று சாதிப்பாரேயானால், அதற்கு நான் முன் வருகிறேன். என்னுடன் வாதிக்கட்டும்”

இவ்வீர உரைகளைக் கேட்ட அரிசங்கரர் குறுநகை புரிந்தார்.

“மிகச் சிறியவன் இப்பையன். இவனா என்னோடு வாதிட முடியும்?” என்றார்.


“சிறியவனானால் என்ன? சீறி வரும் சிங்கக் குட்டிபோல் நிற்கிறானே! வாது தொடங்கட்டும்!” என்றார் பாண்டியர்.

அரிசங்கரர், “முதலில் நான் மூன்று கேள்விகள் கேட்கிறேன். அதற்கு அச்சிறுவன் பதில் கூறட்டும். பின்னர் அவன் கேட்கும் மூன்று கேள்விகட்கு நான் பதில் சொல்கிறேன். இப்பதில்களைக் கொண்டு வெற்றி தோல்வியை முடிவு கட்டலாம்” என்றார்.

இவ்வாறு கூறிவிட்டு அரிசங்கரர் மதிவாணனை நோக்கிக் கேள்விகள் கேட்டார்.

“இந்த உலகத்தை விடப் பெரியது எது?” என்றார் அரிசங்கரர்.

“உலகத்தைச் சூழ்ந்திருக்கும் வானம்!” என்றான் மதிவாணன்.

தத்துவ நோக்கத்தோடு கேள்வி கேட்ட அரிசங்கரர் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது தவறான பதிலென்று சொல்ல முடியவில்லை.

“மனிதனைச் சிறப்புப்படுத்துவன இரண்டு. அவை என்ன?” என்று கேட்டார் அரிசங்கரர்.

‘மதி நுட்பம்; மன அடக்கம்!” என்று பதிலளித்தான் மதிவாணன்.

சமய நூல் கருத்துக்களின்படி பதில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார் அரிசங்கரர். ஆனால், மதிவாணனுடைய பதிலை அவரால் மறுத்துரைக்க முடியவில்லை.

"பொருள்கள் புலனாவது எப்படி?” என்று மூன்றாவது கேள்வியையும் கேட்டு முடித்தார் அரிசங்கரர்.

“கண்ணொளியும் விண்ணொளியும் கலந்து!” என்று பதிலளித்தான் மதிவாணன்.

சிறுவன் ஏதாவது ஒன்றைத்தான் சொல்லுவான்; அகப்பட்டுக் கொள்வான் என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால், மதிவாணன் அவர் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி விட்டான்.

அடுத்து மதிவாணன் கேள்வி கேட்க வேண்டிய கட்டம் வந்தது.

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான் மதிவாணன்.

வேதாந்தத்தில் இந்தக் கேள்விக்கு யாரும் விடையளித்ததே கிடையாது. சிறுவன் சரியான ஆளாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்ட அரிசங்கரர், தனக்கு இக்கேள்விக்கு விடை கூறத் தெரியாது என்று சொல்லி விட்டார்.

“நீங்கள் எங்கு செல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டான் மதிவாணன்.

இறந்தவர்கள் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போவார்கள் என்பது சமயக்கொள்கை. தான் போக வேண்டிய இடத்தைத் தீர்மானிக்க வேண்டியது ஆண்டவனே தவிரத் தானல்ல என்று எண்ணிய அரிசங்கரர் இக்கேள்விக்குத் தன்னால் விடை கூற இயலவில்லை என்று கூறி விட்டார்.

"உங்கள் மனத்தில் என்ன இருந்தது ? என்ன இல்லை ?” என்று கேட்டான் மதிவாணன்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்றே அவருக்குப் புரியவில்லை. திருதிருவென்று விழித்தார்.

மன்னர் இளைஞனை நோக்கி, “மதிவாணா, உன் கேள்விகளுக்கு நீயே விடை சொல்” என்று ஆணையிட்டார்.

“புலவர் அரிசங்கரர் சோழ நாட்டிலிருந்து வருகிறார். சேர நாட்டுக்குப் போவோம் என்று நினைத்துக் கொண்டு பாண்டிய நாட்டுக்கு வந்தார். ஆனால், இங்கு தோல்வியடைந்து விட்டதால், சேரநாடு செல்லாமல் காசிக்கே திரும்பப் போகிறார். இதுவரை தன்னை மிஞ்சிய ஆளில்லை என்ற தற்பெருமை அவர் மனத்தில் இருந்தது; இப்போது அது இல்லை!” என்று தன் மூன்று கேள்விகளுக்கும் உரிய விடைகளைத் தொகுத்துக் கூறினான் மதிவாணன்.


புலவர் அரிசங்கரர் எதிர்பாராத விதமாகத் தாம் அந்த இளைஞனிடம் ஏமாந்து போனதை எண்ணித் தலை குனிந்தார்.

கூடி நின்ற மக்களோ, இவ்வளவு எளிய பதில்களே சொல்லத் தெரியாத இவர் எப்படி ஐம்பத்து நான்கு நாடுகளிலும் வாதில் வெற்றி பெற்றார் என்று வியப்படைந்தார்கள்.

பாண்டியன் அவரைப் பத்திரமாகக் காசிக்கு அனுப்பி வைத்தான்.

உருவத்தால் சிறியவர் என்று எண்ணி ஒருவர் திறமையைக் குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1327.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License