இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

சூதாடிக்குக் கிடைத்த இந்திர பதவி


முன்னொரு காலத்தில் சூதாடி ஒருவன் இருந்தான். அவன், சூதாடுவதன் மூலம் பணம் ஈட்டியதோடு, அனைத்துக் கெட்ட பழக்கங்களும் கை வரப்பெற்றவனாக இருந்தான். அதோடு இறைவனையும், சாதுக்களையும் அவதூறாகப் பேசி வந்தான்.

ஒரு நாள் அவனது தந்திரத்தால், சூதாட்டத்தில் பெரும் பணம் ஈட்டினான். அதனால் மகிழ்ச்சி அடைந்தவன், சந்தனம், மாலை ஆகியவற்றுடன் விலைமாதுவின் வீட்டை நோக்கிப் பயணப்பட்டான். மது போதை காரணமாக கால்கள் தள்ளாட நடந்தவன், ஓரிடத்தில் கால் இடறிக் கீழே விழுந்து நினைவிழந்தான்.

நினைவு திரும்பியதும், அவனது மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். இதுவரையான தனது தீய வாழ்க்கையைப் பற்றி நினைத்து வருந்தினான்.

மனதில் ஏதோ ஒரு தெளிவு பிறந்திருந்தது. அந்த சுத்தமான மனதுடன், அங்கிருந்த சிவலிங்கத்திற்கு தன் கையில் இருந்த சந்தனம், மாலை ஆகியவற்றை அணிவித்து விட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றான்.

ஆனால், அன்று இரவே அவனது உயிர் பிரிந்தது.

எமதூதர்கள் வந்து, அந்த சூதாடியை எமலோகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

எமதர்மராஜன், சூதாடியைப் பார்த்து, “நீ செய்துள்ள இழிவான செயல்கள் காரணமாக நரகத்தில் மிகவும் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அதைக் கேட்டு மிகவும் அச்சம் அடைந்த அந்த சூதாடி, “சுவாமி.. நான் ஏதாவது புண்ணியம் கூட செய்திருக்கலாம் அல்லவா? தயவு செய்து அதற்கான பலனையும் பார்த்துத் தீர்ப்புக் கூறுங்கள்” என்று வேண்டிக் கொண்டான்.

உடனே எமதர்மராஜன் தனது உதவியாளரான சித்ரகுப்தனை பார்த்தார்.

அவர், “சூதாடியே.. நீ இறப்பதற்கு முன் சிறிதளவு சந்தனத்தை, சிவலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்துள்ளாய். அதன் பயனாக, நீ சொர்க்கத்தில் மூன்று நாழிகை நேரம் அரசனாக வீற்றிருக்கும் தகுதியைப் பெற்றுள்ளாய்” என்றார்.

அதைக் கேட்ட சூதாடி, “சுவாமி.. அப்படியானால் முதலில் சொர்க்கத்தில் நான் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க அனுமதி தாருங்கள். அதன்பிறகு நரகத்தில் நான் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை மொத்தமாக அனுபவித்துக் கொள்கிறேன்” என்று கேட்டான்.

அவனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சூதாடி, சொர்க்கலோகம் அழைத்துச் செல்லப்பட்டான்.


அங்கு இந்திரனிடம் நடந்தவற்றைக் கூறி, “மூன்று நாழிகை நேரம் நீ இந்திரப் பதவியை துறக்க வேண்டும். இவனது அரச பதவி காலம் முடிந்ததும் நீ மீண்டும் பதவி ஏற்றுக் கொள்ளலாம்” என்று சொல்லப்பட்டது.

அதன்படி இந்திரன் அரியணையில் இருந்து இறங்க, சொர்க்கலோகம் எனப்படும் தேவர்களின் உலகத்திற்கு, சூதாடி அரசனானான்.

“மூன்று நாழிகை நேரத்தில் என்ன செய்யலாம்” என்று சிந்தித்தவன், ஈசனைச் சரணடைந்தான்.

அதோடு பொருளின் மீது, போதையின் மீது இருந்த பற்று அவனுக்கு அறவே அற்றுப் போயிருந்தது.

ஆகையால் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பொன்னையும், பொருளையும் பிறருக்குத் தானமாக கொடுக்கத் தொடங்கினான்.

சிவபெருமானின் பக்தனாக மாறியிருந்த அந்த சூதாடி, இந்திரனிடம் இருந்த ஐராவதம் என்ற யானையை, அகத்தியருக்குத் தானமாக அளித்தான்.

உச்சைச்ரவஸ் என்ற குதிரையை விஸ்வாமித்திர முனிவருக்கு வழங்கினான்.

காமதேனு என்னும் பசுவை வசிஷ்டருக்கும், சிந்தாமணி என்னும் ரத்தினத்தை காலவ மகரிஷிக்கும், கற்பக மரத்தை கவுண்டின்ய முனிவருக்கும் அளித்துவிட்டான்.

இப்படி தனது மூன்று நாழிகை நேர அரசப் பதவி காலம் நிறைவடையும் வரை, ஒவ்வொரு பொருளாக மற்றவர்களுக்கு தானம் அளித்துக் கொண்டே இருந்தான்.

மூன்று நாழிகை நேரம் முடிந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் அரியணையில் இருந்து இறங்கிப் போய்விட்டான்.

தேவேந்திரன் திரும்பி வந்து பார்த்த போது, அமராவதி எனப்படும் சொர்க்கலோகமே பொன் பொருட்கள் இன்றி வெறுமையாகக் காட்சி தந்தன.


உடனே கோபத்துடன் எமலோகம் சென்றவன், “எமதர்மரே.. நீங்கள் என்னுடைய பதவியை ஒரு சூதாடிக்குக் கொடுத்து, தகாத பணியைச் செய்து விட்டீர்கள். அவன் அமராவதியையே வறுமைக்குரியதாக மாற்றிவிட்டுச் சென்றுவிட்டான். என்னுடைய பொன், பொருள், ரத்தினங்கள் அனைத்தையும் முனிவர்களுக்கு தானம் அளித்து விட்டான்” என்று முறையிட்டான்.

அதற்கு எமதர்மன், “தேவர்களின் அரசனான நீங்கள், இழந்துவிட்ட பொருட்களை எண்ணிதான் மிகவும் வருந்துகிறீர்கள். உங்களுக்கு அவற்றின் மீதான பற்று இன்னும் போகவில்லையா?.. நீங்கள் இதுவரை பல நூறு யாகங்களைச் செய்து பெற்ற பலனை விட, இந்த மூன்று நாழிகை நேரத்தில் அந்தச் சூதாடி செய்த தானங்களால் அதிக பலனை அடைந்து விட்டான். அதோடு இனி அவன் அனுபவிக்க இருந்த நரக தண்டனையும் ரத்தாகிப் போனது. தன்னிடம் அதிகாரம் கிடைத்த பின்னும், அதை அனுபவிக்கத் துடிக்காமல், மற்றவர்களுக்கு நற்காரியங்களைச் செய்பவனே மேலானவன். நீங்கள் முனிவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து, அவர்களிடம் இருந்து பொன், பொருள், ரத்தினங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1339.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License