இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

சீதை அனுமனுக்குச் சொன்ன கதை


சீதை அசோகவனத்தில் இருந்த போது, அவளுக்கு அரக்கிகள் பலவிதமான துன்பம் அளித்தார்கள்.

இராவண வதம் முடிந்தது. அனுமன், சீதையைத் துன்புறுத்திய அரக்கியர்களுக்குச் சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்கு அவன் சீதையிடம் அனுமதி வேண்டினான்.

அப்போது, அனுமனுக்கு சீதை பின்வரும் கதையைக் கூறினாள்:

வேடன் ஒருவன், காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தான்.

எதிர்பாராத விதமாக ஒரு புலி, வேடனைத் துரத்தியது.

வேடன் மிகவும் பயந்துவிட்டான். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.

வேடன் ஏறிய மரத்தின் மேல் கிளையில் ஒரு கரடி உட்கார்ந்திருந்தது.

கரடியைப் பார்த்த வேடன் அதனிடம், "ஒரு புலி என்னைத் துரத்தி வருகிறது. இந்த ஆபத்திலிருந்து என்னை நீதான் காப்பாற்ற வேண்டும். நான் உன்னிடம் சரணடைகிறேன்'' என்று கூறி சரணடைந்தான்.

தன்னிடம் சரணடைந்த வேடனிடம் கரடி, "நீ பயப்படாதே! உன்னை நான் காப்பாற்றுகிறேன்,'' என்று வாக்குறுதி அளித்தது.

இதற்குள் வேடனைத் துரத்தி வந்த புலி, அந்த மரத்தின் கீழ் வந்து நின்றது.

புலி அந்த இடத்தைவிட்டுப் போகாமல், அங்கேயே நின்றுகொண்டிருந்தது. சிறிது நேரம் ஆயிற்று. வேடனுக்குத் தூக்கம் வந்தது.

வேடன் கரடியின் மடியில் தலைவைத்து, தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருந்தான்.

அப்போது மரத்தின் கீழே நின்றுகொண்டிருந்த புலி, மரத்தில் உட்கார்ந்திருந்த கரடியிடம், "நண்பனே! நாம் இருவரும் மிருகங்கள், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். நம் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது. இவனோ மனிதன், அதிலும் வேடன். நம் இருவருக்கும் ஜென்மப் பகைவன். இவன் நம்மைக் கொல்வதையேத் தன் தொழிலாகக் கொண்டிருக்கிறான். இவன் நமது இனத்தைச் சேர்ந்தவன் அல்ல, நாம் வாழும் இடத்தில் வாழ்பவனும் அல்ல. இன்றைய தினம் நீ இவனைக் காப்பாற்றினாலும் அதை மறந்துவிட்டு, நாளைய தினமே இவன் உன்னைக் கொல்வதற்கு முயற்சி செய்வான். எனவே, நீ இந்த வேடனை என்னிடம் பிடித்துத் தள்ளிவிடு. அதனால் நமக்குப் பெரிய ஓர் ஆபத்து நீங்கும்'' என்று கேட்டுக் கொண்டது.

புலி கூறியதைக் கேட்ட கரடி, "இது என்ன அநியாயம்? நான் இருக்கும் இடத்தைத் தேடி வந்து, இந்த வேடன் என்னிடம் சரணடைந்திருக்கிறான். அத்தகைய வேடனை நான் கைவிடக் கூடாது, கைவிடவும் மாட்டேன். அப்படியேக் கைவிட்டால், எனக்கு இந்த உலகத்தில், "நண்பனுக்குத் துரோகம் செய்தவன்” என்ற கெட்ட பெயர் ஏற்படும். அதோடு, மறுஉலகத்தில் கடுமையான நரகமும் கிடைக்கும். எனவே நீ சொல்வது போல் செய்ய மாட்டேன்'' என்று கூறியது.

இந்த உரையாடலுக்குப் பிறகு, தூங்கிக்கொண்டிருந்த வேடன் உறக்கம் கலைந்து கண் விழித்தான்.

இப்போது கரடிக்குத் தூக்கம் வந்தது.

அது வேடன் மடியில் தன் தலையை வைத்து தூங்க ஆரம்பித்தது. கரடி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

அப்போது மரத்தின் கீழே இருந்த புலி வேடனிடம், "முட்டாளே! என்னிடமிருந்து தப்ப வேண்டும்” என்று நீ போயும் போயும் ஒரு கரடியிடம் சரணடைந்திருக்கிறாயே! கரடி என்ன... உன் மனித இனத்தைச் சேர்ந்ததா? அது உன்னுடைய நண்பனா? கரடி உன்னுடைய பகைவன் என்பதை நீ சரியாகப் புரிந்துகொள். நான் எப்போது இந்த மரத்தின் கீழிருந்து போவேன்” என்று, இந்தக் கரடி காத்துக் கொண்டிருக்கிறது. நான் இங்கிருந்து சென்றதும், உடனே கரடி உன்னைக் கொன்றுவிடும். கரடியின் உறக்கம் கலைவதற்கு முன்பு, அதைப் பிடித்து நீ என்னிடம் தள்ளிவிடு. நான் உனக்குப் பதிலாக அதைத் தின்றுவிட்டு, இங்கிருந்து சென்று விடுகிறேன். அதனால் நம் இருவருக்கும் நன்மை ஏற்படும்'' என்று கூறியது.


புலி கூறியதைக் கேட்ட வேடன் மயங்கினான். அவனுக்குக் கரடியிடம் இருந்த நம்பிக்கை போய்விட்டது.

எனவே அவன் கரடியை மரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டான்.

கீழே விழும்போதே கரடிக்குத் தூக்கம் கலைந்தது. அதனால் அது தன் இயல்பு காரணமாக ஒரு கிளையைப் பிடித்து, மீண்டும் மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டது.

அதை வேடன் பார்த்தான்.

அப்போது அவன், "கரடிக்கு நான் செய்த துரோகம் இப்போது தெரிந்துவிட்டது. அதனால் அது இப்போது என்னைக் கொன்றுவிடப் போகிறது!” என்று நினைத்து பயந்து நடுங்கினான். வேடன் பயப்படுவதை கரடி புரிந்து கொண்டது.

எனவே அது வேடனிடம், "நண்பனே! நீ பயப்படாதே... "நீ எனக்குத் துரோகம் செய்தாய்'' என்று நான் நினைக்கவே மாட்டேன். நான் உன்னைக் காப்பாற்றுவதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். அதை நிச்சயம் காப்பாற்றுவேன். நான் வாக்கு தவற மாட்டேன்'' என்று கூறியது.

அப்போது புலி கரடியிடம், "நண்பனே! நான் கூறியது போலவே நடந்ததை நீயே பார்த்தாய் அல்லவா? "இந்த வேடன் நன்றி இல்லாதவன், செய்நன்றி கொன்றவன், நண்பனுக்குத் துரோகம் செய்பவன் என்று, இப்போதாவது நீ தெரிந்துகொண்டாயா? இனியும் இவன் மீது நீ இரக்கம் காட்டாமல், இவனை என்னிடம் தள்ளிவிடு'' என்றது.

அதற்குக் கரடி, "தீய இயல்பு உடையவர்கள், மற்றவர்களுக்குத் தீமை செய்தாலும், அறிவுள்ள ஒருவன், தீமை செய்தவர்களைப் பகைத்துக் கொள்வானா? நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதுதான் எனக்குப் பெரிதே தவிர, என் உயிர் எனக்குப் பெரிதல்ல. உலகில் பிறவி எடுத்தவர்களுக்கு அணிகலனாக இருப்பது சத்தியம் மட்டுமே!'' என்று பதில் கூறியது.

சொன்னபடி கரடி வேடனைக் காப்பாற்றியது.


இந்தக் கதையை சீதை அனுமனுக்குக் கூறிவிட்டு, "ஆஞ்சநேயா! நான் என்ன மிருகத்தை விடத் தாழ்ந்தவளா? நமக்கு நன்மையைச் செய்தவர்களிடம், நாம் எப்படி அன்பு பாராட்டி அவர்களுக்கு உதவி செய்கிறோமோ, அது போலவே நமக்குத் தீமை செய்தவர்களுக்கும் நாம் உதவி செய்யவேண்டும். நமக்கு உதவி செய்தவர்களுக்கு, நாம் உதவி செய்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நமக்குத் தீமை செய்பவர்களுக்கு உதவி செய்வதுதான் சிறப்புக்கு உரியது'' என்று கூறி, அரக்கியர்களை மன்னிக்கும்படிச் செய்தாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1392.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License