இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

கேள்விக்குச் சரியான பதில் எது?


ஹிட்லரின் பிரச்சார மந்திரியாக இருந்தவர், கோயபெல்ஸ். ஒரு முறை அவர் ஒரு வயோதிக யூதப் பாதிரியாரைச் சந்தித்தார்.

கோயபெல்ஸ் அவரிடம், "நீங்கள் யூதர்கள். உங்களுடைய மத தர்ம நூல் "தால் முத்” என்று சொல்லப்படுகிறது. அதை நீங்கள் நன்கு பயின்றிருப்பதனால், ஒரு விதமாக தார்மீக ரீதியில் தர்க்கம் செய்கிறீர்கள் என்றும், அதிலிருந்து உங்களுடைய அறிவுச்சக்தி வெளிப்படுகிறது என்றும் நான் கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள் எனக்கு அதைக் கற்பிப்பீர்களா?” என்று கேட்டான்.

அதனைக் கேட்ட பாதிரியார், விருப்பு வெறுப்புமற்ற பாவனையோடு சாந்தமான குரலில், “அதை நான் உங்களுக்குக் கற்பிப்பதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஆனால், அந்த அரிய நூலை நீர் கற்றுக் கொள்வதற்கான வயதுதான் கடந்து போய்விட்டது” என்றார், பாதிரியார்.

“என்ன?, இந்த வயதில் அதனை நான் கற்றுக் கொள்ள முடியாதா? அது அவ்வளவு கடினமான ஒரு நூலா?” என்று சற்றுத் தன் குரலை உயர்த்தினான் கோயபெல்ஸ்.

“ஐயா, உண்மையைச் சொன்னால், யூத இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், அந்த மத நூலைக் கற்க விரும்பினாலும் கூட, அவனை நாங்கள் தீரப் பரிசோதிப்போம். முதலில் மூன்று கேள்விகளைக் கேட்போம். அவற்றிற்குச் சரியாக விடை தரவில்லையெனில் அவனுக்கு அது கற்பிக்கப்படுவதில்லை” என்று சொன்னார் அந்தப் பாதிரியார்.

“நல்லது, அப்படியானால், அப்பரிசோதனையை இப்போதே தொடங்குங்கள். நான் அதில் நிச்சயம் தேர்ச்சி பெறுவேன்” என்றான் கோயபெல்ஸ்.

“மிகவும் நல்லது, கேளுங்கள்... இரண்டு வாலிபா்கள் புகையும், புழுதியுமாகவுள்ள ஒரு குழாய்க்குள் புகுந்து சற்று நேரம் விளையாடுகிறார்கள். பிறகு, வெளியே வந்து நேருக்கு நோ் நின்று ஒருவனையொருவன் பார்க்கிறான். அவா்களில் ஒருவன் புழுதியும், புகையும் படிந்த உடையும், உடல் முழுவதும் அழுக்குப் படிந்தவனாகவும் காணப்படுகிறான். மற்றொருவனுடைய உடலிலோ உடையிலோ ஒரு துளி கூட அழுக்குப் படிந்திருக்கவில்லை. அந்த இருவரில், “உடனே சென்று குளிக்கவேண்டும்” என்ற எண்ணம் யாருக்கு முதலில் தோன்றக்கூடும் சொல்லுங்கள் பாக்கலாம்” என்றபடி தன்னுடைய முதல் கேள்வியைக் கேட்டார், அந்தச் சாதுவான பாதிரியார்.

“ஓ, இதுதானா அந்தக் கேள்வி? இதில் யோசிக்க, என்ன சிரமம். அழுக்குப் படிந்திருந்த வாலிபன்தான் முதலில் போய்க் குளிப்பான்” என்றான்.

கோயபெல்ஸின் இந்த விடையைக் கேட்ட பாதிரியார், “தவறு... அழுக்குப் படியாதிருந்த வாலிபன்தான் முதலில் போய்க் குளிப்பான்” என்றார்.

“எப்படி?” என்று வியப்பாகத் திருப்பிக் கேட்டான், கோயபெல்ஸ்.

“எப்படியென்றால், இருவரும் விளையாடிவிட்டு வெளியே வந்து ஒருவனை ஒருவன் பார்த்துக் கொள்கிறான். அழுக்குப் படிந்த வாலிபன், மற்றவனைப் பார்த்து ‘புகையும், புழுதியும் படிந்த குழாயுக்குள் சென்று விளையாடி விட்டு வந்தும், தனக்கு ஒரு துளி அழுக்கும் படியவில்லையல்லவா? என்று யோசித்தால் அழுக்குப்படியாத மற்ற வாலிபன், இந்த அழுக்குப் படிந்தவனைப் பார்த்தவுடனே, ‘இருவரும் அழுக்குப் படிந்தவராயுள்ளோம்’ என்று யோசித்தவாறு குளிப்பதற்காக உடனே முயலுவான்” என்றார், பாதிரியார்.

“உங்களுடைய பதில் மிகவும் சரியானது. அப்படியே இருக்கலாம். சரி அடுத்தக் கேள்வியைக் கேளுங்கள்” என்றான், கோயபெல்ஸ்.


“இரண்டாவது கேள்வி, இரண்டு வாலிபர்கள் புகையும் புழுதியுமாகவுள்ள ஒரு குழாய்க்குள் புகுந்து சற்று நேரம் விளையாடுகிறார்கள். பிறகு வெளியே வந்து நேருக்கு நேர் நின்று ஒருவனையொருவன் பார்க்கிறான். அவர்களில் ஒருவன் புழுதியும், புகையும் படிந்து உடையும், உடல் முழுவதும் அழுக்குப் படிந்தவனாகவும் காணப்படுகிறான். மற்றொருவனுடைய உடலில் ஒரு துளியுங்கூட அழுக்குப் படிந்திருக்கவில்லை. அந்த இருவரில் ‘உடனே சென்று குளிக்க வேண்டும்’ என்ற எண்ணம் யாருக்கு முதலில் தோன்றக் கூடும்?”

“இது, முதலில் கேட்ட அதே கேள்விதான்” என்றான் கோயபெல்ஸ்.

“அல்ல; இது முற்றிலும் வேறான கேள்வி” என்றார் பாதிரியார்.

“அப்படியே இருக்கட்டும். இந்த இரண்டாவது கேள்வியில் நீர் என்னைத் தோற்கடிக்க முடியாது. அழுக்குப்படியாதிருந்த வாலிபனே, முதலில் குளிக்க முயலுவான்” என்றான் கோயபெல்ஸ்.

“தவறு” என்றார் பாதிரியார்.

“அப்படியானால், இந்த விடை உங்களாலேயே முன்னால் சொல்லப்பட்டதல்லவா” என்றான் கோயபெல்ஸ்.

“அந்தக் கேள்வி, வேறொன்றைப் பற்றியது. இந்தக் கேள்வியின் சரியான விடை அதுவல்ல. அழுக்குப் படிந்த வாலிபன்தான் முதலில் குளிக்கச் செல்கிறான்” என்பதுவே இந்தக் கேள்வியின் விடை. எப்படியென்றால், முன்பு போலவே இருவரும் நேருக்கு நேர் நின்று ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் போது, அழுக்குப் படியாதிருந்த வாலிபன் அழுக்குப் படிந்தவனைப் பார்த்து, ‘ஐயோ, நானும் இவனைப் போன்றுதான் அழுக்கடைந்திருப்பேன் என்று சிந்திக்கிறான். ஆனால், உடனே தன்னைத்தான் பார்த்துக் கொண்டு அவனைப் போல் நான் மாசு படிந்தவனாகயில்லை என்று நினைப்பான். அப்போது, அழுக்குப் படிந்த வாலிபனும், தன் தோழனைக் கண்டு தானும் இவனைப் போலவே மாசற்றவனாக உள்ளேனோ? என்று தனக்குள்ளேயே எண்ணுவான். மேலும் தன்னுடைய உடலையும், உடையையும் உற்றுப் பார்ப்பான். அவனுடைய அழுக்கு படிந்த தோற்றம் “உடனேயேக் குளிக்க வேண்டும்” என்ற எண்ணத்தை உண்டாக்கக் கூடுமல்லவா?” என்றார் பாதிரியார்.

“ஓ, மிகவும் சரி, உம்முடைய சாதுர்யத்துக்கு ஒரு அளவை என்னால் காண இயலவில்லை. சரி, அந்த மூன்றாவது கேள்வியையும் கேட்டு விடுங்கள்” என்றார் கோயபெல்ஸ்.

“மூன்றாவது கேள்வி: மிகமிகக் கடினமானது. இரண்டு வாலிபர்கள் புகையும், புழுதியுமாகவுள்ள ஒரு குழாய்க்குள் புகுந்து சற்று நேரம் விளையாடுகிறார்கள். பிறகு வெளியே வந்து... ... ... ”

“இதுவும் நீர் முன்பு கேட்ட கேள்வியே”

“இல்லை... ... .. கேள்வியில் இருக்கும் சொற்கள் மட்டும் அவைகள்தான். ஆயினும், கேள்வி முற்றிலும் வேறானது.”

“அப்படியானால், அழுக்குப் படியாத வாலிபனேக் குளிக்க முயலுவான்” என்றான் இடைமறித்து கோயபெல்ஸ்.

“தவறு” என்று பாதிரியார் மறுத்தார்.

“அது தவறென்றால், அழுக்குப் படிந்திருந்த வாலிபன்தான் குளிப்பான்” என்றான் கோயபெல்ஸ்.

“தவறு” என்றார் பாதிரியார்.

“இரண்டும் தவறு என்றால், சரியான விடைதான் என்ன?” என்ற அதிகாரக் குரலோடு கர்ஜித்தான் கோயபெல்ஸ்.


“இந்தக் கேள்வியே அறிவீனமானது என்பதுடன் சரியான பதில். எப்படியென்றால் இரண்டு வாலிபர்கள் ஒன்றாகப் போய்க் குழாய்க்குள் புகுந்து விளையாடினால் ஒருவருக்கு அழுக்குப் படிந்தும் மற்றொருவருக்கு அழுக்குப் படியாதும் இருப்பதுதான் எப்படி? இந்தச் சிறிய வினாவில் இருக்கக் கூடிய சிக்கலான, “இயல்புக்கு மாறானது இது” என்று புரிந்து கொள்ளாத ஒருவன் அந்த மகத்தான 'தால் முத்’ என்ற நூலை எப்படிச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். நீங்களேச் சொல்லுங்கள்” என்றார் யூதப் பாதிரியார்.

பொய் சொல்லியேப் புகழ் பெற்ற கோயபெல்ஸ்க்கு இந்த உண்மை மிகவும் கசந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1423.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License