இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

கடக்கிட்டி முடக்கிட்டி


வயதான கிழவன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. அவனுக்கு உதவி செய்பவர்கள் யாருமே இல்லை. அதனால் அவன் தானே பாடுபட்டுப் பணம் சம்பாதித்தால்தான் பிழைக்க முடியும்.

அவன் ஒரு அடர்ந்த காட்டுக்குப் பக்கத்தில் சிறிய குடிசை ஒன்று போட்டுக்கொண்டான். அந்தக் காட்டில் நாள் தோறும் விறகு ஒடித்து வருவான். பிறகு அதைச் சுமையாகக் கட்டுவான். பக்கத்தில் இருந்த ஒரு பட்டணத்தில் அதை விற்று, அதனால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வயிறு வளர்த்து வந்தான்.

ஆனால், விறகுச் சுமையைத் தலையில் வைத்துக் கிழவனால் சுமந்து செல்ல முடியுமா? அதற்காக அவன் ஒரு கழுதையை வளர்த்து வந்தான். அந்தக் கழுதையின் மேல் விறகுக் கட்டை வைத்துப் பட்டணத்திற்கு ஓட்டிச் செல்லுவான். விறகு விற்று வரும் பணத்தைக் கொண்டு சமையலுக்கு வேண்டிய அரிசி பருப்பு முதலியவற்றை வாங்கி வருவான். இப்படி அவன் வாழ்நாள் கழிந்து கொண்டிருந்தது.

இளம் வயதிலிருந்தே அந்தக் கழுதை விறகைச் சுமந்து சென்றதால் அதன் பின் கால்கள் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாக உன் பக்கம் வளைந்து விட்டன. அதனால் அந்தக் கழுதை நடக்கும் போது பின் கால்கள் ஒன்றோடொன்று இடித்துக் கொள்ளும். அப்படி இடித்துக் கொள்ளும் போது “கடக்கிட்டி முடக்கிட்டி, கடக்கிட்டி முடக்கிட்டி” என்று சத்தம் கேட்கும். கழுதை விரைவாக ஓடும்போது இந்தச் சத்தம் மேலும் அதிகமாகக் கேட்கும். அதனால் அந்தக் கழுதைக்குக் கிழவன் ‘கடக்கிட்டி முடக்கிட்டி’ என்றே செல்லமாகப் பெயர் வைத்துவிட்டான்.

பட்டணத்திலிருந்து மாலை நேரத்தில் திரும்பிய பிறகு கிழவன் சமையல் செய்யத் தொடங்குவான். அதற்காக அரிசியையும் பருப்பையும் தண்ணீரில் தனித்தனியாகப் போட்டு அரித்து உலையில் இடுவான். அப்படிச் செய்வதால் கிடைக்கும் கழுநீரைத் தன் கழுதைக்கு வைப்பான். கழுதையும் ஆவலோடு அதைக் குடித்துவிட்டுக் குடிசைக்குப் பக்கமாக வெளியே புல் மேயச் செல்லும். நன்றாக இருட்டும் வரையில் அது மேய்ந்து விட்டுக் குடிசைக்கு வந்துவிடும்.

குடிசைக்குப் பக்கத்தில் உள்ள காட்டிலே புலிகள் இருந்தன. அவற்றால் இந்தக் கழுதைக்கு ஏதாவது தீங்கு நேராமல் இருப்பதற்காகக் கிழவன் ஒரு தந்திரம் செய்தான். நல்ல செம்மண்ணாகப் பார்த்துக் கொண்டு வந்து தண்ணீரில் கரைத்தான். அதைக் கழுதையின் கால்களை விட்டுவிட்டு உடம்பு முழுவதும் நன்றாகப் பூசினான். பச்சைத் தழையைக் கசக்கிக் கழுதையின் கால்களுக்கும் முகத்திற்கும் பசேலென்று சாயம் தீட்டினான். இவ்வாறு செய்த பிறகு பார்த்தால் கழுதையின் உருவமே அடையாளம் தெரியாமல் மாறி விட்டது. ஏதோ ஒரு விநோதமான விலங்கு போல் அது காட்சி அளித்தது. சாயம் கொஞ்சம் மங்கும்போது மறுபடியும் அடித்து விடுவான்.

இவ்வாறு செய்த பிறகுதான் பயமில்லாமல் கழுதையை மேயவிட்டான். இருந்தாலும் கழுதை காட்டிற்குள் அதிகத்தூரம் செல்லாமலும், அதிக நேரம் இருட்டிலே வெளியில் இராமல் குடிசைக்கு வருமாறும் அவன் பழக்கி இருந்தான்.

இவ்வாறு கழுதைக்கு எவ்விதத் தீங்கும் வராமல் காலம் ஓடிக்கொண்டிருந்தது.


ஒரு நாள் கழுதைக்குக் காட்டிற்குள்ளே கொஞ்சம் நுழைந்தால் பசும்புல் நிறையக் கிடைக்கும் என்று தோன்றியது. விரைவில் குடிசைக்குத் திரும்பிவிடலாம் என்று எண்ணிக்கொண்டு காட்டில் உள்ளே புகுந்து மேயத் தொடங்கிற்று. உள்ளே போகப்போகப் பசும்புல் நிறைய வளர்ந்திருப்பதைப் பார்த்து, அதை மேய வேண்டும் என்ற ஆசையால் அது அதிகத் தூரம் சென்று விட்டது. திடீரென்று சூரியன் மறைந்து நன்றாக இருட்டும் கட்டத் தொடங்கிவிட்டது.

அந்த வேளையிலே ஒரு புலி எதிரே வந்தது. புல்லை மேயவேண்டும் என்ற பேராசையால் உயிருக்கே ஆபத்து வரும் போலிருந்தது. இருந்தாலும் நடந்து போனதை எண்ணி வருத்தப்படுவதில் பயனில்லை என்று அதற்குப் பட்டது. அதனால் கடக்கிட்டி முடக்கிட்டி தைரியத்தை இழக்காமல் புலியிடமிருந்து தப்பவேண்டும் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.

புலி பலமுள்ளதாக இருந்தாலும் இயற்கையாகவே சந்தேகமுள்ள மிருகம். இந்தச் சந்தேகமும் கடக்கிட்டி முடக்கிட்டிக்கு உதவியாக அமைந்தது.

எதிரே வந்த புலி கடக்கிட்டி முடக்கிட்டியின்மேல் உடனே பாய்ந்து கொல்ல முயற்சி செய்யவில்லை. ‘நான் பார்த்துள்ள விலங்குகள் போல் இது இல்லையே! இது ஏதோ புது மாதிரியான விலங்குபோல் இருக்கிறதே! இதன் பெயர் என்னவாக இருக்கும்? இதன் மேல் பாய்ந்தால் ஒருவேளை ஆபத்தாக முடியுமோ?’ என்று புலி யோசித்தது. எதற்கும் அருகே சென்று பேசிப் பார்ப்போம் என்று அது மெதுவாக நகர்ந்து வந்தது.

சிவப்புச் சாயமும் பச்சைச் சாயமும் கடக்கிட்டி முடக்கிட்டியைப் புதியதோர் விலங்காகச் செய்திருந்தன. சற்று அருகில் வந்ததும், “உன் பெயர் என்ன?” என்று புலி தயக்கத்தோடு கழுதையிடம் கேட்டது.

“கடக்கிட்டி முடக்கிட்டி” என்று தைரியமாகக் கழுதை பதில் சொல்லிற்று.

பெயரைக் கேட்டதும் புலிக்கு மேலும் சந்தேகம் வந்துவிட்டது. ‘இந்த மாதிரிப் பெயரை நான் கேட்டதே இல்லையே! மான், மாடு என்று இவ்வாறு பல மிருகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கடக்கிட்டி முடக்கிட்டி என்று கேள்விப்பட்டதே இல்லையே! இருந்தாலும் நன்கு விசாரிப்போம்’ என்று புலி தனக்குள் தீர்மானம் செய்தது.

“உனக்கு அண்ணன் தம்பிகள் உண்டா?”

இரண்டு பேர் அண்ணன் உண்டு. மூத்தவன் ‘சடக்கிட்டி முடக்கிட்டி’ ; இரண்டாவது அண்ணன் பெயர் மடக்கிட்டி முடக்கிட்டி'. எனக்குத் தம்பி இல்லை" என்று கடக்கிட்டி முடக்கிட்டி பதில் சொல்லிற்று.

இந்தப் பெயர்களைக் கேட்டதும் புலிக்கு மேலும் சந்தேகம் அதிகமாகிவிட்டது. “பெயரெல்லாம் விநோதமாக இருக்கிறதே!” என்று தாழ்ந்த குரலில் புலி கேட்டது.

“ஆமாம், மூத்த அண்ணன் புலியின் கழுத்தைச் ‘சடக்’கென்று கடித்துக் கொல்வான். அதனால் அவன் சடக்கிட்டி முடக்கிட்டி. இரண்டாவது அண்ணன், புலியின் முதுகு எலும்பை ‘மடக்’ என்று கடிப்பான். அதனால் அவன் பெயர் மடக்கிட்டி முடக்கிட்டி. நான் ‘கடக்’ என்று கடிப்பேன். அதனால் நான் கடக்கிட்டி முடக்கிட்டி” என்றது கழுதை.

“அது சரி. எல்லோருக்குமே முடக்கிட்டி என்று பொதுவாக எப்படிப் பெயர் வந்தது?"

“அதுவா? அது எங்கள் அருமையான பட்டப்பெயர்” என்று கழுதை தலையை நிமிர்த்திக்கொண்டு சொல்லிற்று.

“யார் அப்படிப் பட்டம் கொடுத்தார்கள்?”

“நம் சிங்க ராஜாதான் கொடுத்தார். வேறு யார் கொடுப்பார்கள்?”

“எதற்காக அப்படிப் பட்டம் கொடுத்தார்?”


“எல்லாம் எங்கள் வீரச்செயலைப்பற்றி அறிந்துதான் கொடுத்தார். மூத்த அண்ணன் நூறு புலிகளைச் ‘சடக்’ என்று கடித்துக் கொன்றார். சின்ன அண்ணன் இருநூறு புலிகளை ‘மடக்’ என்று கடித்தெறிந்தார். நான் அவர்களையெல்லாம் மீற வேண்டுமென்று இதுவரை இரு நூற்றுத் தொண்ணூற்று ஒன்பது புலிகளை ‘கடக்’ என்று கடித்துக் கொன்றிருக்கிறேன். இன்னும் முந்நூறு ஆகவில்லை. நல்ல வேளை, இப்பொழுது நீ வந்து அகப்பட்டிருக்கிறாய். உன்னையும் ‘கடக்’ என்று கடித்துக் கொன்று விட்டால் சரியாக முந்நூறு ஆகிவிடும்" என்று கடக்கிட்டி முடக்கிட்டி தனது வாயைத் திறந்து பல்லைக் காட்டிற்று.

புலி பயந்து ஓடியேப் போய்விட்டது. கழுதையின் பல்லையெல்லாம் பார்க்க அது நிற்கவே இல்லை. தப்பினால் போதும் என்று ஓடிவிட்டது.

‘பசும் புல்லின் மேலிருந்த பேராசையால் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் போலிருந்தது. நல்ல வேளை, தைரியத்தை இழக்காமல் அறிவைப் பயன்படுத்தித் தப்பினேன். இனி மேல் இவ்வளவு தூரம் வரவே மாட்டேன்’ என்று எண்ணிக்கொண்டே கிழவனுடைய குடிசையை நோக்கி வேகமாகக் கழுதை நடந்தது. அப்பொழுது பின் கால்கள் ‘கடக்கிட்டி முடக்கிட்டி, கடக்கிட்டி முடக்கிட்டி’ என்று சத்தம் செய்வதைக் கேட்க வேண்டுமே!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1501.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License